நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி, வியாக்கிரமர்
என்ற இவர், என்னுடன் எண்மரும் ஆமே.
நந்தி பெருமானின் அருளைப் பெற்ற குரு நாதர்களை ஆராயின் அவர்கள் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்னும் நால்வர். அவர்களுடன் சிவயோக முனிவரும், திருவம்பலத்தில் திருக்கூத்தைத் தரிசித்த பதஞ்சலியும், வியாக்கிரபாதரும் என்னுடன் கூட எட்டுப் பேருமாகும்.
விளக்கம் : நந்தி எனப்படுபவர் சிவபெருமான். நந்திகள் நால்வர் என்பது சிவபெருமானிடம் உபதேசம் பெற்ற நால்வர். சிவபெருமானையும் அவனது அருள் பெற்றவரையும் நந்தி என்றே ஆசிரியர் உரைப்பர். என்னோடு - இந்நூலின் ஆசிரியனான திருமூலரான என்னுடன். மன்று தொழுத பதஞ்சலி தில்லையம்பலத்தில் கூத்தபிரானின் கூத்தைத் தொழுத பதஞ்சலி முனிவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக