54. திருநெறி ஆவது, சித்து அசித்து அன்றிப்
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குருநெறியாம் சிவ மரம்நெறி கூடும்
ஒருநெறி; ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.
கடவுள் நெறி என்று சிறப்பித்துக் கூறப்படுவது அறிவு அறியாமை அற்ற வீடுபேறாய் உள்ள இறைவனை எண்ணிக் குருவினால் உணர்த்தப்படும் நெறியாய்ச் சிவத்தைப் பொருந்துகின்ற ஒப்பில்லாத நெறியாகும். இத்தகைய நெறியையே சிறப்பான வேத முடிவான உபநிடதம் விளக்கும்.
விளக்கம் : குருநெறி - சன்மார்க்க நெறி. ஒருநெறி -ஒப்பில்லாத நெறி. வேதாந்தம் - வேதம் + அந்தம்; வேதாந்தம் - வேதத்தின் முடிவு. குருவின் அருளால் சிவனடியைச் சேர்ப்பிக்கும் நெறியை உபநிடதம் கூறுகின்றது என்க. திருநெறி - தெய்வீக நெறி.
விளக்கம் : குருநெறி - சன்மார்க்க நெறி. ஒருநெறி -ஒப்பில்லாத நெறி. வேதாந்தம் - வேதம் + அந்தம்; வேதாந்தம் - வேதத்தின் முடிவு. குருவின் அருளால் சிவனடியைச் சேர்ப்பிக்கும் நெறியை உபநிடதம் கூறுகின்றது என்க. திருநெறி - தெய்வீக நெறி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக