வியாழன், 22 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 62 பரசிவத்திடமிருந்து பெற்றவை.


62.                        சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம் 
                             உவமா மகேசர் உருத்திர தேவர் 
                             தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற  
                             நவஆ கமம் எங்கள் நந்தி பெற்றானே.

     சிவமான பரம் பொருளிடமிருந்து சத்தியும் சதாசிவமும் உள்ளத்துக்கு உகந்த மகேசர், உருத்திரர், தவம் செய்த திருமால், நான்முகன் ஆகியவர் அவரவர் அறிவில் விளங்கிய ஒன்பது ஆகமங்களும் எம் குருநாதனாகிய நந்தியம்பெருமான் வழியாய்ப் பெற்றவையாகும். 



     விளக்கம் :  பரசிவத்திடமிருந்து ஆகமத்தைக் குருநாதனான நந்தி பெற்றான் என்க. பரம் - மேலான பொருள். உவமாமகேசர் - உள்ளத்துக்கு உவந்த மகேசர். தவமால் - தவத்தைச் செய்யும் திருமால். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக