வியாழன், 15 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 53 நுண்ணிய நிலையினன் சிவபெருமான்.


53.                        இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே 
                             உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி,
                             வெருக்கு உரு வாகிய வேதியர் சொல்லும்  
                             கருக் குரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

     மந்திரத்தின் வடிவாய் உள்ள அழகிய வேதத்தில் உள்ளத்தை உருக்கும் உணர்வாய் உணரப்படும் விதத்தில் விளங்கி, அச்சத்தை ஏற்படுத்தும் கம்பீர ஒலியுடைய வேத மந்திரங்களாய் நுண்ணிய நிலையில் விளங்குபவன் மூன்று கண்களையுடைய சிவபெருமான்.    



     விளக்கம் :  இருக்கு உருவாம் - மந்திர வடிவான. வெரு - அச்சம். வேதத்தில் உள்ளத்தை உருக்கும் மந்திரங்களும் உண்டு. பிறரை அழிக்கும் அச்சம் தரும் மந்திரமும் உண்டு. கருக்குரு - நுன்வடிவான கருநிலை. கண்ணன் - மூன்று கண்களையுடைய சிவபெருமான். திருமால் என உரைப்பாரும் உளர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக