1. அறுபது ஆண்டுகளில் இது முதலாவது ஆண்டாகும்.
2. பிரபவ ஆண்டின் அதிதேவதை : பிரம்மா.
3. அதிதேவதையின் நிறம் : தாமரை மலரின் நிறம்.
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : பருத்த உடலமைப்பு, சிவந்த கண்கள்
5. ஆண்டுத்தேவதையின் அணிகலன்கள் : விபூதி, ஜபமாலை அணிந்தவர்.
6. பிரபவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
எல்லாப் பொருள்களையும் சம்பாதித்துச் சேர்ப்பதில் ஆசை கொண்டவன். குழந்தை பாக்கியமுடையவன். அறிவாளி. நீண்ட ஆயுள் கொண்டவன். எல்லா போகங்களையும் துய்ப்பவன்.
1. அறுபது ஆண்டுகளில் இது இரண்டாவது ஆண்டாகும்.
2. விபவ ஆண்டின் அதிதேவதை : விஷ்ணு.
3. அதிதேவதையின் நிறம் : மேக நிறம்.
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : சிவப்பு முத்துமாலை அணிந்தவர்.
தோள்வளை அணிந்தவர்.
5. ஆண்டுத்தேவதையின் வாகனம் : (ரதம்) தேர்.
6. விபவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
விளைந்து வரும் தானிய உணவு உட்கொள்பவன். அழகிய தோற்றம் உள்ளவன். வலிமை உள்ளவன். ஆற்றல் மிக்கவன். கலைகளில் ஈடுபாடு கொள்பவன். குலத்தின் தலைவனாயும், நற்குணம் மிக்கவனாயும், அறிவாளியாயும் இருப்பான்.
3. சுக்கில ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது மூன்றாவது ஆண்டாகும்.
2. சுக்கில ஆண்டின் அதிதேவதை : மகேஸ்வரன்.
3. அதிதேவதையின் நிறம் : வெண்மை
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : சந்தனம் பூசியவர், வெண்ணிற
ஆடை அணிந்தவர்.
5. சுக்கில ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
மகிழ்ச்சியும், தாராள மனமும், நல் மனைவி மக்களும், நிறைந்த செல்வமும், எல்லா பாக்கியங்களும், சிறந்த கல்வியும், பணிவும் வாய்க்கப் பெற்றவன்.
4. பிரமோதூத ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது நான்காவது ஆண்டாகும்.
2. பிரமோதூத ஆண்டின் அதிதேவதை : கணேசன்.
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : ஐந்து முகங்கள், பயங்கர தோற்றம்,
மிரளும் பார்வையுடன் கூடிய
கண்கள், மனைவியுடன் கூடியவர்.
5. பிரமோதூத ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
தானம் செய்பவன், மகிழ்ச்சி மிக்கவன், அழகன், உண்மை பேசுபவன், நற்குணங்கள், செயல்திறன் மற்றும் அகம்பாவமும் மிக்கவன்.
5. பிரஜோற்பத்தி (பிரஜாபதி) ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது ஐந்தாவது ஆண்டாகும்.
2. பிரஜோற்பத்தி ஆண்டின் அதிதேவதை : கனபன்.
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : வரஹஸ்தம் , அபயஹஸ்தம்,
பருத்த வயிறு, சிவந்த கண்கள்
5. பிரஜோற்பத்தி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
தானத்தில் ஈடுபாடு உடையவன், தயாள குணம் மிக்கவன், குலதருமம் காப்பவன், ஒழுக்கமுடையவன், தேவதைகள், அந்தணர்களைத் தொழுபவன், அடக்கம் மிக்கவன்.
6. ஆங்கீரஸ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது ஆறாவது ஆண்டாகும்.
2. ஆங்கீரஸ ஆண்டின் அதிதேவதை : ஷடானனன் (ஆறுமுகன்)
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : வெண்மையானவர், சக்கரம்போல்
வட்ட வடிவம், இருகைகளிலும்
தாமரை மலர்கள்.
5. ஆங்கீரஸ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
பிறர் மனதை ஈர்க்கும் தோற்றம், சுகவாசி, போகங்களைத் துய்ப்பவன், இனிமையாக உரையாடுபவன், மிகுந்த மக்கட்செல்வம் பெற்றவன், அறிவாற்றல் மற்றும் திறமைகளை மறைத்து வைப்பவன், நீண்ட ஆயுள் உடையவன்.
7. ஸ்ரீமுக ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது ஏழாவது ஆண்டாகும்.
2. ஸ்ரீமுக ஆண்டின் அதிதேவதை : வள்ளி
3. அதிதேவதையின் நிறம் : பொன்னிறம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : பருத்த கழுத்து, தாமரையை ஒத்த
கண்கள், இரத்தினங்களால்
அலங்கரிக்கப்பட்டவர், மஞ்சள்
நிறமேனி.
5. ஸ்ரீமுக ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
செல்வந்தன், புகழ்மிக்கவன், சாத்திரங்கள் அறிந்தவன், நண்பர் குழாம் மிக்கவன், அறிவாளி, வலிமை மிக்கவன், கொடையாளி.
8. பவ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது எட்டாவது ஆண்டாகும்.
2. பவ ஆண்டின் அதிதேவதை : கெளரி
3. அதிதேவதையின் நிறம் : மரகதப்பச்சை
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : ஜடத் தோற்றம், கையில் மான்,
உயரே தூக்கிய கைகள்.
5. பவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
புகழ் பெற்றவன், நல்மனமுடையவன், நற்குணங்கள் மிக்கவன், தைரியமுள்ளவன், பணிவுடையவன், மகிழ்ச்சி மிக்கவன், பலருக்கு விரும்பத்தகாதவனும் ஆவான்.
9. யுவ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது ஒன்பதாவது ஆண்டாகும்.
2. யுவ ஆண்டின் அதிதேவதை : பிராம்ஹி
3. அதிதேவதையின் நிறம் : பொன்னிறம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : கருட பார்வை, நீலோத்பல
மலருடையவர், இருகைகள்,
தாமரையையொத்த கண்கள்.
5. யுவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
தூய்மையான உடல், நற்குணங்கள், அடக்கம், அமைதி, தானம் செய்வதில் விருப்பு, சிறந்த அறிவு, நீண்ட ஆயுள், மகிழ்ச்சி முதலியவற்றுடன் கூடியவனாவான்.
10. தாது ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது பத்தாவது ஆண்டாகும்.
2. தாது ஆண்டின் அதிதேவதை : மகேஸ்வரி
3. அதிதேவதையின் நிறம் : வெண்மை
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : கையில் தாமரை மலர்,
மலைபோல் கம்பீரத் தோற்றம்,
தாமரை மலரையொத்த
நிறமுடைய மேனி, மூன்று
கண்கள், பயமற்ற தன்மை.
5. தாது ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
எல்லோராலும் கொண்டாடப்படுபவன், நற்குணங்களும் கௌரவமும் உடையவன், அழகாக இருப்பவன், குருபக்தி உடையவன், சிற்பி, நற்குணங்கள் உடையவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக