ஞாயிறு, 25 நவம்பர், 2012

ASTROLOGY - 36 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


1.  பிரபவ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முதலாவது ஆண்டாகும்.
2. பிரபவ ஆண்டின் அதிதேவதை         : பிரம்மா.  
3. அதிதேவதையின் நிறம்                     : தாமரை மலரின் நிறம்.
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்    : பருத்த உடலமைப்பு, சிவந்த கண்கள் 
5. ஆண்டுத்தேவதையின் அணிகலன்கள் : விபூதி, ஜபமாலை அணிந்தவர்.
6. பிரபவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     எல்லாப் பொருள்களையும் சம்பாதித்துச் சேர்ப்பதில் ஆசை கொண்டவன். குழந்தை பாக்கியமுடையவன். அறிவாளி. நீண்ட ஆயுள் கொண்டவன். எல்லா போகங்களையும் துய்ப்பவன்.
  

2.  விபவ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இரண்டாவது ஆண்டாகும்.
2. விபவ ஆண்டின் அதிதேவதை         : விஷ்ணு.  
3. அதிதேவதையின் நிறம்                    : மேக நிறம்.
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்   : சிவப்பு முத்துமாலை அணிந்தவர்.
                                                                   தோள்வளை அணிந்தவர். 
5. ஆண்டுத்தேவதையின் வாகனம்     : (ரதம்) தேர்.
6. விபவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     விளைந்து வரும் தானிய உணவு உட்கொள்பவன். அழகிய தோற்றம் உள்ளவன். வலிமை உள்ளவன். ஆற்றல் மிக்கவன். கலைகளில் ஈடுபாடு கொள்பவன். குலத்தின் தலைவனாயும், நற்குணம் மிக்கவனாயும், அறிவாளியாயும் இருப்பான். 


3.  சுக்கில ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது மூன்றாவது ஆண்டாகும்.
2. சுக்கில ஆண்டின் அதிதேவதை        : மகேஸ்வரன்.  
3. அதிதேவதையின் நிறம்                    : வெண்மை 
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்   : சந்தனம் பூசியவர், வெண்ணிற 
                                                                   ஆடை அணிந்தவர்.
5. சுக்கில ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :

     மகிழ்ச்சியும், தாராள மனமும், நல் மனைவி மக்களும், நிறைந்த செல்வமும், எல்லா பாக்கியங்களும், சிறந்த கல்வியும், பணிவும் வாய்க்கப் பெற்றவன்.




4.  பிரமோதூத ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது நான்காவது ஆண்டாகும்.
2. பிரமோதூத ஆண்டின் அதிதேவதை : கணேசன்.  
3. அதிதேவதையின் நிறம்                     : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்    : ஐந்து முகங்கள், பயங்கர தோற்றம்,  
                                                                    மிரளும் பார்வையுடன் கூடிய     
                                                                    கண்கள், மனைவியுடன் கூடியவர்.
5. பிரமோதூத ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :

     தானம் செய்பவன், மகிழ்ச்சி மிக்கவன், அழகன், உண்மை பேசுபவன், நற்குணங்கள், செயல்திறன் மற்றும் அகம்பாவமும் மிக்கவன்.



5.  பிரஜோற்பத்தி (பிரஜாபதி) ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஐந்தாவது ஆண்டாகும்.
2. பிரஜோற்பத்தி ஆண்டின் அதிதேவதை : கனபன்.  
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : வரஹஸ்தம் , அபயஹஸ்தம்,  
                                                                         பருத்த வயிறு, சிவந்த கண்கள்
5. பிரஜோற்பத்தி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :

     தானத்தில் ஈடுபாடு உடையவன், தயாள குணம் மிக்கவன், குலதருமம் காப்பவன், ஒழுக்கமுடையவன், தேவதைகள், அந்தணர்களைத் தொழுபவன், அடக்கம் மிக்கவன்.





6.  ஆங்கீரஸ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஆறாவது ஆண்டாகும்.
2. ஆங்கீரஸ ஆண்டின் அதிதேவதை         : ஷடானனன் (ஆறுமுகன்)  
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : வெண்மையானவர், சக்கரம்போல்  
                                                                         வட்ட வடிவம், இருகைகளிலும்  
                                                                         தாமரை மலர்கள்.
5. ஆங்கீரஸ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     பிறர் மனதை ஈர்க்கும் தோற்றம், சுகவாசி, போகங்களைத் துய்ப்பவன், இனிமையாக உரையாடுபவன், மிகுந்த மக்கட்செல்வம் பெற்றவன், அறிவாற்றல் மற்றும் திறமைகளை மறைத்து வைப்பவன், நீண்ட ஆயுள் உடையவன்.




7.  ஸ்ரீமுக ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஏழாவது ஆண்டாகும்.
2. ஸ்ரீமுக ஆண்டின் அதிதேவதை               : வள்ளி  
3. அதிதேவதையின் நிறம்                          : பொன்னிறம் 
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : பருத்த கழுத்து, தாமரையை ஒத்த  
                                                                         கண்கள், இரத்தினங்களால்  
                                                                         அலங்கரிக்கப்பட்டவர், மஞ்சள்  
                                                                         நிறமேனி.
5. ஸ்ரீமுக ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     செல்வந்தன், புகழ்மிக்கவன், சாத்திரங்கள் அறிந்தவன், நண்பர் குழாம் மிக்கவன், அறிவாளி, வலிமை மிக்கவன், கொடையாளி.




8.  பவ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது எட்டாவது ஆண்டாகும்.
2. பவ ஆண்டின் அதிதேவதை                    : கெளரி  
3. அதிதேவதையின் நிறம்                          : மரகதப்பச்சை 
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : ஜடத் தோற்றம், கையில் மான், 
                                                                         உயரே தூக்கிய கைகள்.
5. பவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     புகழ் பெற்றவன், நல்மனமுடையவன், நற்குணங்கள் மிக்கவன், தைரியமுள்ளவன், பணிவுடையவன், மகிழ்ச்சி மிக்கவன், பலருக்கு விரும்பத்தகாதவனும் ஆவான்.




9.  யுவ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஒன்பதாவது ஆண்டாகும்.
2. யுவ ஆண்டின் அதிதேவதை                   : பிராம்ஹி  
3. அதிதேவதையின் நிறம்                          : பொன்னிறம் 
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : கருட பார்வை, நீலோத்பல   
                                                                         மலருடையவர், இருகைகள்,  
                                                                         தாமரையையொத்த கண்கள்.
5. யுவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     தூய்மையான உடல், நற்குணங்கள், அடக்கம், அமைதி, தானம் செய்வதில் விருப்பு, சிறந்த அறிவு, நீண்ட ஆயுள், மகிழ்ச்சி முதலியவற்றுடன் கூடியவனாவான்.




10.  தாது ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது பத்தாவது ஆண்டாகும்.
2. தாது ஆண்டின் அதிதேவதை                  : மகேஸ்வரி 
3. அதிதேவதையின் நிறம்                          : வெண்மை  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : கையில் தாமரை மலர்,  
                                                                         மலைபோல் கம்பீரத் தோற்றம், 
                                                                         தாமரை மலரையொத்த 
                                                                         நிறமுடைய மேனி, மூன்று 
                                                                         கண்கள், பயமற்ற தன்மை.
5. தாது ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     எல்லோராலும் கொண்டாடப்படுபவன், நற்குணங்களும் கௌரவமும் உடையவன், அழகாக இருப்பவன், குருபக்தி உடையவன், சிற்பி, நற்குணங்கள் உடையவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக