கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை,
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்
பேரு அங்கம் ஆகப் பெருக்குகின் றாரே.
ஆறு அங்கங்களாய் விளங்கும் வேதத்தை அருளிச் செய்தவன் இறைவன். அவ்விறைவனை உடலின் பகுதியாய்க் கொண்டு அவனது இயல்பை உணர்பவர் இலர். அவனைத் தம்மின் வேறு அங்கமாக எண்ணி வழிபட்டுப் பின் தம் விருப்பங்களைப் பெருக்கிக் கெட்டுப் போகின்றார்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக