அஞ்சொடு இருபத்து மூன்றுஉள ஆகமம்;
அஞ்சலி கூப்பி அருபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
கருமையான நிறம் பொருந்திய உமையம்மையை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமான் அருளிய ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. குறையாத திருவடியுணர்வு கை வரப்பெற்ற மேலவரான விஞ்ஞகர் என்னும் நல்லார் இருபத்தெண்மரும் அந்த ஆகமங்களைக் கேட்டு அறிந்தனர். அந்த இருபத்தெட்டு ஆகமங்களையும் சிவபெருமான் தனக்குரிய ஒப்பில்லாத திருமுகங்கள் ஐந்தனது உச்சித் திருமுகத்தால் உரைத்தருளினான். அவற்றுள் கூறப்படுவதே அரும் பொருள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக