வானவர் சுழு முனையில் விளங்கும் இறைவனை வாழ்க என்று வாழ்த்துவர். அசுரர் அப்பெருமானை வாழ்க என்று வாழ்த்துவர். மனிதர், அவன் திருவடி வாழ்க என்று வாழ்த்துவர். நான் அப்பெருமானை வணங்கி அன்பினுள் விளங்குமாறு நிலை பெறும்படி செய்தேன்.
விளக்கம் : தேவர் அன்பின்றி வணங்குவர். ஞானியர் அன்புடன் வணங்குவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக