வெள்ளி, 28 டிசம்பர், 2012

ASTROLOGY - 39 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


31.  ஹேவிளம்பி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்தொன்றாவது ஆண்டாகும்.
2. ஹேவிளம்பி ஆண்டின் அதிதேவதை   : ஆதித்யன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : சோர்வடைந்த மேனி, சிவந்த  
                                                                        கண்கள், தாயின் அருகில்  
                                                                        உள்ளவர், புத்திமான்.

புதன், 26 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 74 திருக்கூத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தேன்!


74.                        செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்     
                             அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்    
                             தப்புஇலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் 
                             ஒப்பில் எழுகோடி யுகம்இருந் தேனே.

ASTROLOGY - 38 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


21.  சர்வஜித் ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது இருபத்தியோராவது ஆண்டாகும்.
2. சர்வஜித் ஆண்டின் அதிதேவதை           : ஜ்யோதிஷ்மான் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : அழகிய கைகள், நீண்ட மூக்கு, நீள்  
                                                                        முகம், மெல்லிய உதடு, எல்லாச்  
                                                                        செயல்களையும் சாதிக்க வல்ல 
                                                                        தோற்றம். 
5. சர்வஜித் ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     அரசனின் கௌரவம் காப்பவன், விழாக்களைக் கொண்டாடுபவன், மாசற்றவன், பருத்த உடம்பையுடையவன், மேனியழகு மிக்கவன், எப்பொழுதும் பகைவரை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டவன்.

திங்கள், 24 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 73 சிவபெருமானைத் தியானித்து நூலைத் தொடங்குகின்றேன்!


73.                        நந்தி திருஅடி நான் தலைமேற் கொண்டு    
                             புந்தியின் உள்ளே புகப்பெய்து, போற்றிசெய்து   
                             அந்தி மதிபுனை அரனடி நாள்தொறும் 
                             சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற் றேனே. 

செவ்வாய், 11 டிசம்பர், 2012

You Want Beautiful Face : மேக்கப் போடாமலேயே அழகு முகம்!


     பெண்கள் மேக்கப் போட்டால்தான் அழகாக இருக்க முடியும் என்பதில்லை. மேக்கப் எதுவும் போடாமலேயே அழகாகத் தோன்ற முடியும். அந்த காலத்து தமிழ் பெண்கள் முகத்தை கடலை மாவு போட்டு கழுவி, மஞ்சள் பூசி குங்குமம் வைத்து அழகாக இருப்பார்கள்.

திங்கள், 10 டிசம்பர், 2012

Cabbage : முட்டை கோஸ்!


     சித்தர்களும், ஞானிகளும் அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

TSUNAMI Warning in Japan : ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை.


     ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்த நாட்டின் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹான்சு நகருக்கு அருகே உள்ள சென்டாய் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Solar Power : கூடலூரில் சூரிய மின் சக்தி!



     கூடலூரில் நூற்றாண்டு காலமாக மின் சப்ளை இல்லாத மேலம்பளம் ஆதிவாசி கிராமத்தில் 'சூரிய மின் சக்தி சேமிப்பு நிலையம்' அமைத்து, வீடுகள், தெரு விளக்குகளுக்கு மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது.

புதன், 5 டிசம்பர், 2012

Nanjil Sambath Joined in ADMK : நாஞ்சில் சம்பத் கொள்கை பரப்பு துணை செயலர்!


      ம. தி. மு. க., வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த பிரபல நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ. தி. மு. க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி. மு. க., பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ. தி. மு. க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம. தி. மு. க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

THIRUMANTIRAM - 72 கடன்களைச் செய்ய உபதேசித்தல்.


72.                        எழுந்துநீர் பெய்யினும்எட்டுத் திசையும்   
                             செழுந்தண் நியமங்கள் செய்யுமினென் றண்ணல்   
                             கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே   
                             அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

THIRUMANTIRAM - 71 சிவபெருமான் செய்த உபதேச இயல்பு.


71.                        மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்   
                             ஒழிந்த பெருமை யிறப்பும் பிறப்பும்  
                             செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்    
                             கழிந்த பெருமையைக் காட்டகி லானே.

THIRUMANTIRAM - 70 நால்வர் உபதேசம் செய்தல்!


70.                        நால்வரும் நாலு திசைகொன்று நாதர்கள்  
                             நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு 
                             நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென  
                             நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

THIRUMANTIRAM - 69 திருமூலரின் மாணவர் எழுவர்!


69.                        மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்  
                             இந்திரன் சோமன் பிரம னுருத்திரன் 
                             கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு    
                             இந்த எழுவரு மென்வழி யாமே.

THIRUMANTIRAM - 68 நந்தி வழிகாட்ட நான் இருந்தேன்!


68.                        நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்; 
                             நந்தி அருளாலே மூலனை நாடினோம்;
                             நந்தி அருளாவது என் செயும் நாட்டினில்  
                             நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

ASTROLOGY - 37 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


11.  ஈஸ்வர ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது பதினோறாவது ஆண்டாகும்.
2. ஈஸ்வர ஆண்டின் அதிதேவதை            : கௌமாரி 
3. அதிதேவதையின் நிறம்                          : பாடல வர்ணம்  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : ஆயிரம் சூரியன்களை ஒத்த ஒளி  
                                                                         பொருந்திய மேனி, வானத்தை  
                                                                         நோக்கிய திருமுகம், பல வர்ண 
                                                                         ஆடை, இரண்டு கைகள்.

வியாழன், 29 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 67 குரு பாரம்பரியம் - நந்தி அருள் பெற்ற எண்மர்.


67.                        நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் 
                             நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி 
                             மன்று தொழுத பதஞ்சலி, வியாக்கிரமர் 
                             என்ற இவர், என்னுடன் எண்மரும் ஆமே.

Vaikuntha Dwaram : வைகுண்டம் கிடைக்கும்!



     ராமானுஜரின் வரலாற்றோடு தொடர்புடையவர் திருக்கச்சி நம்பிகள். கஜேந்திர தாசர் என்பது அவருடைய இயற்பெயர். பூவிருந்தவல்லியைச் சேர்ந்த வைசியர் குலத்தவரான கஜேந்திரதாசர், ஸ்ரீபெரும்புதூர் வேதியரான கேசவ சோமயாஜியுடன் (ராமானுஜரின் தந்தை) தோழமை கொண்டிருந்தார். 

புதன், 28 நவம்பர், 2012

Navabashana Navagrahas : தோஷங்கள் போக்கும் நவபாஷான கடற்கரை!


     இலங்கை சென்று ராவணனை வதம் செய்து சீதையுடன் திரும்பிய ராமன் இங்குள்ள கடற்கரை ஓரம் அமர்ந்து சிவனை வழிபட நினைத்தார். லிங்கம் எடுத்துவரச் சென்ற ஹனுமான் வர தாமதம் ஆனதால், சீதை கடற்கரை மண்ணிலே பிடித்த லிங்கத்தை ராமர் வழிபட்டார்.

LADIES HOSTEL : லேடீஸ் ஹாஸ்டல் - மகளிர் மட்டும்.


     கல்லூரிகள் திறக்கும் நேரம் இது. புதிய கல்லூரியில் காலடி வைக்கும் பெண்கள் தங்கள் கல்லூரியில் இருக்கும் விடுதிகளில் தங்கி படிப்பார்கள். சிலர் தனியார் பெண்கள் விடுதியில் தங்குவார்கள். படிக்கும் பெண்கள் மட்டுமல்ல, பணிக்கு செல்லும் பெண்களும் சென்னைக்கு வந்தால் தனியார் விடுதிகளில் தங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

செவ்வாய், 27 நவம்பர், 2012

Walking Techniques : நடந்தால் மூட்டுத் தேயுமா?


     ‘அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடும்’ என்கிறார்களே, உண்மைதானா? பதில் சொல்கிறார் பிஸியோதெரபி டாக்டர் ரம்யா.

Torture for 13 year girl : சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!



     தளசேரி : கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருத்தி அவளது தந்தை, சகோதரன் மற்றும் மாமா ஆகியோரால் 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளான செயல் அம்மாநிலத்தை பதை பதைக்க வைத்துள்ளது.

திங்கள், 26 நவம்பர், 2012

SMS : தொல்லை எஸ்.எம்.எஸ். - இல்லை இனிமேல்!



     கொசுபோல் கும்பல் கும்பலாய் வந்து தொல்லை தந்த விளம்பர எஸ்.எம்.எஸ்.களுக்கு மூக்கணாங்கயிறு மாட்டியுள்ளது ட்ராய். விளம்பரக் குறுஞ்செய்திகளால் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் செல்பேசிப் பயனர்களுக்கு இனிப்பான செய்தி.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

ASTROLOGY - 36 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


1.  பிரபவ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முதலாவது ஆண்டாகும்.
2. பிரபவ ஆண்டின் அதிதேவதை         : பிரம்மா.  
3. அதிதேவதையின் நிறம்                     : தாமரை மலரின் நிறம்.
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்    : பருத்த உடலமைப்பு, சிவந்த கண்கள் 
5. ஆண்டுத்தேவதையின் அணிகலன்கள் : விபூதி, ஜபமாலை அணிந்தவர்.
6. பிரபவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     எல்லாப் பொருள்களையும் சம்பாதித்துச் சேர்ப்பதில் ஆசை கொண்டவன். குழந்தை பாக்கியமுடையவன். அறிவாளி. நீண்ட ஆயுள் கொண்டவன். எல்லா போகங்களையும் துய்ப்பவன்.

THIRUMANTIRAM - 66 சிவனை ஆகம அறிவால் அறிய இயலாது.


66.                        அவிழ்க்கின்றவாறும், அதுகட்டு மாறும்  
                             சிமிட்டலைப் பட்டுஉயிர் போகின்ற வாறும்  
                             தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் இரண்டும் 
                             உணர்த்தும் அவனை உணரலும் ஆமே.

சனி, 24 நவம்பர், 2012

ASTROLOGY - 35 : ஜோதிடம் - ஆண்டுகள்.


இந்திய ஆண்டுகளுக்கு இணையான ஆங்கில ஆண்டுகள்.

வ. எண்.  ஆண்டின் பெயர்.        1           2           3         அபிமான தேவதை.

    1.          பிரபவ                       1867      1927      1987         பிரம்மா    

    2.          விபவ                        1868      1928      1988         விஷ்ணு  
         
    3.          சுக்கில                       1869      1929      1989         மகேசன்

THIRUMANTIRAM - 65 ஊழிக்காலத்தில் அருளினான்.


65.                        மாரியும் கோடையும் வார்பனி தூங்க, நின்று 
                             ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து 
                             ஆரியமும் தமிழும் உடனே சொலிக் 
                             காரிகை யார்க்குக் கருணை செய்தானே.

ASTROLOGY - 34 : ஜோதிடம் - இராசிகள்.


மீன ராசி 

     இராசி மண்டலத்தில் இது பன்னிரெண்டாவது இராசியாகும். இது காண்பதற்கு இரு மீன்கள் ஒன்றின் வாலை மற்றொன்று பற்றிக்கொண்டு இருப்பது போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் மீன ராசி எனும் பெயரிட்டனர்.

ASTROLOGY - 33 : ஜோதிடம் - இராசிகள்.


கும்ப ராசி 

     இராசி மண்டலத்தில் இது பதினொன்றாவது இராசியாகும். இது காண்பதற்கு குடத்துடன் கூடிய மனிதனைப் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் கும்ப ராசி எனும் பெயரிட்டனர்.

THIRUMANTIRAM - 64 பயனற்றவை.


64.                        அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் 
                             எண்இலி கோடி தொகுத்திடும் ஆயினும் 
                             அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்  
                             எண்இலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

வெள்ளி, 23 நவம்பர், 2012

ASTROLOGY - 32 : ஜோதிடம் - இராசிகள்.


மகர ராசி 

     இராசி மண்டலத்தில் இது பத்தாவது இராசியாகும். இது காண்பதற்கு சுறா மீன் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் மகர ராசி எனும் பெயரிட்டனர்.

THIRUMANTIRAM - 63 ஒன்பது ஆகமங்களின் பெயர்கள்.


63.                        பெற்றநல் லாகமம் காரணம் காமிகம்   
                             உற்றநல் வீர முயர்சிந்திய வாதுளம்   
                             மற்றவ்வி யாமள மாகுங்கா லோத்தரம்   
                             துற்றநற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே.

Rajapalayam Ramasubramania Raja : தாகம் தீர்க்கும் தயாள மனிதர்!


     ராஜபாளையம், மண் எப்படியோ அதே போல மக்களின் மனதும் அப்படியே காட்டை திருத்தி நாடாக்கியவர்கள் நிறைந்த மண், தென்மாவட்டங்களிலேயே தொழில்வளம் நிறைந்த வளமையான பூமி.

I will go to Prison : நான் ஜெயிலுக்குப போறேன்!


       மனைவியின் நச்சரிப்பு தாங்காமல், சிறைக்கு செல்ல முயன்று, ஓட்டல் உரிமையாளர் ஒருவர், கொள்ளையடிப்பு நாடகத்தை நடத்தியுள்ளார். தைவான் நாட்டை சேர்ந்தவர் பய், 36. இவரது மனைவி, தினமும் இவரை திட்டிக்கொண்டே இருந்ததால், மனம் வெறுத்து போன பய், சிறைக்கு சென்று நிம்மதியாக இருக்க திட்டமிட்டார்.

வியாழன், 22 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 62 பரசிவத்திடமிருந்து பெற்றவை.


62.                        சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம் 
                             உவமா மகேசர் உருத்திர தேவர் 
                             தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற  
                             நவஆ கமம் எங்கள் நந்தி பெற்றானே.

புதன், 21 நவம்பர், 2012

ASTROLOGY - 31 : ஜோதிடம் - இராசிகள்.


தனுர் ராசி 

     இராசி மண்டலத்தில் இது ஒன்பதாவது இராசியாகும். இது காண்பதற்கு வில்லைப் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும்  தனுசு ராசி  எனும் பெயரிட்டனர்.

THIRUMANTIRAM - 61 அறிவாய் விளங்குபவன்.


61.                        பரனாய்ப் பராபரம் காட்டி உலகில் 
                             தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து     
                             அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி 
                             உரன்ஆகி ஆகமம் ஓங்கிநின் றானே.

செவ்வாய், 20 நவம்பர், 2012

ASTROLOGY - 30 : ஜோதிடம் - இராசிகள்.


விருச்சிகம் ராசி 

     இராசி மண்டலத்தில் இது எட்டாவது இராசியாகும். இது காண்பதற்கு தேள் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும்  விருச்சிகம் ராசி  எனும் பெயரிட்டனர்.

THIRUMANTIRAM - 60 நீர்மேல் எழுத்தாகும்.


60.                        அண்ண லருளா லருளுந்திவ் யாகமம் 
                             விண்ணி லமரர் தமக்கும் விளங்கரிது   
                             எண்ணி லெழுபது கோடிநூறாயிரம்  
                             எண்ணிலும் நீர்மே லெழுத்தது வாகுமே.

திங்கள், 19 நவம்பர், 2012

NATURE FOOD IS UNEQUAL : ஈடில்லா இயற்கை உணவு!



     விடிந்தும், விடியாத அந்த அதிகாலை வேளையிலே ஒரு சின்னஞ்சிறிய கடைமுன் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டத்திற்கு காரணம் அங்கு வழங்கப்படும் இயற்கை உணவுகள்தான்.

ASTROLOGY - 29 : ஜோதிடம் - இராசிகள்.


துலா ராசி 

     இராசி மண்டலத்தில் இது ஏழாவது இராசியாகும். இது காண்பதற்கு தராசைக்கையில் கொண்டுள்ள ஒரு மனிதனைப் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் துலா ராசி எனும் பெயரிட்டனர்.

THIRUMANTIRAM - 59 சிவபெருமான் வெளிப்படுத்தியவை அறத்தை உரைப்பன.


59.                        பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும் 
                             கண்டவர் கூறும் கருத்தறி வாரென்க    
                             பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் 
                             அண்ட முதலா நரஞ்சொன்ன வாறே.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

ASTROLOGY - 28 : ஜோதிடம் - இராசிகள்.


கன்னி ராசி 

     இராசி மண்டலத்தில் இது ஆறாவது இராசியாகும். இது காண்பதற்கு குடத்தைச் சுமந்து நிற்கும் ஒரு பெண்ணைப் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் கன்னி ராசி எனும் பெயரிட்டனர்.

THIRUMANTIRAM - 58 ஆகமத்தின் வழி.


58.                        அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் 
                             எண்ணில், இருபத்தெண் கோடி நூறாயிரம்  
                             விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்;
                             எண்ணிநின்று அப்பொருள் ஏத்துவன் நானே.

THIRUMANTIRAM - 57 ஆகமச்சிறப்பு : ஆகமங்களை அருளியவன்.


 57.                        அஞ்சன மேனி அரிவைஓர் பாகத்தன் 
                             அஞ்சொடு இருபத்து மூன்றுஉள ஆகமம்;
                             அஞ்சலி கூப்பி அருபத் தறுவரும் 
                             அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

Meals for Only One Rupee : நம்பமுடியுமா? ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு!


     மதிய உணவு வேளை ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏ. எம். வி. உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள்.

THIRUMANTIRAM - 56 புறத்தே போய் அழிவர்!


56.                        பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் 
                             ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார் 
                             வேட்டு விருப்பார், விரதம் இல்லாதவர்  
                             ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே.

சனி, 17 நவம்பர், 2012

தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்!


     கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து அத்துமீறலில் ஈடுபடுவதாக தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொண்டுள்ளார்.

ASTROLOGY - 27 : ஜோதிடம் - இராசிகள்.


சிம்ம ராசி

     இராசி மண்டலத்தில் இது ஐந்தாவது இராசியாகும். இது காண்பதற்கு சிங்கம் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் சிம்ம ராசி  எனும் பெயரிட்டனர்.

GUAVA : கொய்யாப்பழம்!


     பழங்களில், மூக்கை துளைக்கும் வாசனை கொண்டதோடு மட்டுமல்லாமல், மிகச்சிறந்த மருத்துவ குணம் உள்ள பழமாகவும் விளங்குகிறது கொய்யா.

THIRUMANTIRAM - 55 சிவனை உணர்வார் இலர்!


55.                        ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக் 
                             கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை,
                             வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் 
                             பேரு அங்கம் ஆகப் பெருக்குகின் றாரே.