1. அறுபது ஆண்டுகளில் இது பதினோறாவது ஆண்டாகும்.
2. ஈஸ்வர ஆண்டின் அதிதேவதை : கௌமாரி
3. அதிதேவதையின் நிறம் : பாடல வர்ணம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : ஆயிரம் சூரியன்களை ஒத்த ஒளி
பொருந்திய மேனி, வானத்தை
நோக்கிய திருமுகம், பல வர்ண
ஆடை, இரண்டு கைகள்.
பொருந்திய மேனி, வானத்தை
நோக்கிய திருமுகம், பல வர்ண
ஆடை, இரண்டு கைகள்.
5. ஈஸ்வர ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
கோபம் உடையவன், துக்கத்தின் உருவம், குணங்கள் நிறைந்தவன், புகழ் மிக்கவன், கலைகளில் திறமையும், நல்ல தன்மைகளையும் உடையவன்.
12. வெகுதான்ய ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது பன்னிரண்டாவது ஆண்டாகும்.
2. வெகுதான்ய ஆண்டின் அதிதேவதை : வைஷ்ணவி
3. அதிதேவதையின் நிறம் : நீல நிறம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : கையில் அமிர்த கலசம், ஒளிரும்
மேனி, விரிந்த மார்பு, தாமரை
மலரையொத்த கண்கள்.
மேனி, விரிந்த மார்பு, தாமரை
மலரையொத்த கண்கள்.
5. வெகுதான்ய ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
வியாபாரத்தில் திறமையுடையவன், அரசர்களால் மதிக்கப்படுபவன், தானம் செய்வதில் ஈடுபாடுடையவன், சாத்திரங்களை அறிந்தவன், தானியங்கள் மற்றும் செல்வத்தைச் சேர்ப்பவன்.
13. பிரமாதி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது பதிமூன்றாவது ஆண்டாகும்.
2. பிரமாதி ஆண்டின் அதிதேவதை : வாராஹி
3. அதிதேவதையின் நிறம் : பச்சை
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : அகன்ற மார்பு, மாணிக்க
ரத்தினங்கள் நிறைந்த கழுத்தணி
அணிந்தவர், தார்மீக மனது
கொண்டவர்.
ரத்தினங்கள் நிறைந்த கழுத்தணி
அணிந்தவர், தார்மீக மனது
கொண்டவர்.
5. பிரமாதி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
எல்லா பாக்கியங்களும் நிறைந்தவன். (ரதம், குதிரை, கொடி) சாத்திரங்களில் ஈடுபாடு, பகைவரை அழிப்பவன், அரசனுக்கு மந்திரியாவான், செய்நன்றி மறவாதவன்.
14. விக்ரம ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது பதினான்காவது ஆண்டாகும்.
2. விக்ரம ஆண்டின் அதிதேவதை : இந்திராணி
3. அதிதேவதையின் நிறம் : கோதுமை
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : பசுமையான கண்கள், நடுத்தர
உயரம், நீண்ட கைகள் மற்றும்
கால்கள்.
உயரம், நீண்ட கைகள் மற்றும்
கால்கள்.
5. விக்ரம ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
கொடுமையான செயல்களில் அதிக ஆர்வமுடையவன், பகைவர்களின் சேனையைத் தன் வயப்படுத்துபவன், சாமார்த்தியசாலி, சூரன், தீரன், கொடையாளி, பகைவரை வெல்பவன்.
15. விஷு ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது பதினைந்தாவது ஆண்டாகும்.
2. விஷு ஆண்டின் அதிதேவதை : சாமுண்டி
3. அதிதேவதையின் நிறம் : நீல நிறம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : முகத்தில் வடு, பூனைக் கண்,
ஒளிரும் மேனி.
ஒளிரும் மேனி.
5. விஷு ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
புகழ் பெற்றவன், மற்றவர்களால் நிந்திக்கப்படுபவன், பெரியோர்களால் தொடரப்படுபவன், பிறர் காரியங்களைச் செய்பவன், பலரைக் காப்பவன், மந்த புத்தியும் பேராசையும் சோம்பேறித்தனமும் உடையவன்.
16. சித்ரபானு ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது பதினாறாவது ஆண்டாகும்.
2. சித்ரபானு ஆண்டின் அதிதேவதை : அரோகன்
3. அதிதேவதையின் நிறம் : கபில நிறம்
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : இரு கைகள், கூன் உடம்பு,
குத்திட்டு நிற்கும் கேசங்கள், பல
அணிகள் அணிந்தவர்.
குத்திட்டு நிற்கும் கேசங்கள், பல
அணிகள் அணிந்தவர்.
5. சித்ரபானு ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
பல நிறங்களுடன் கூடிய ஆடை மற்றும் மலர்களை அணிவதில் ஈடுபாடு கொண்டவன். பலவித மனோபாவம் உடையவன். நற்குணங்கள் மிக்கவன். கலைகளில் ஈடுபாடு கொண்டவன்.
17. சுபானு ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது பதினேழாவது ஆண்டாகும்.
2. சுபானு ஆண்டின் அதிதேவதை : பிராஜன்
3. அதிதேவதையின் நிறம் : கபில வர்ணம்.
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : கருப்பு ஆடை அணிந்தவர்,
தாகத்தினால் களைப்படைந்தவர்,
ஆட்டின் முகம் போன்ற முகம்.
தாகத்தினால் களைப்படைந்தவர்,
ஆட்டின் முகம் போன்ற முகம்.
5. சுபானு ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
சுருட்டையான கேசம், அணுகுவதற்கு எளியவன், அழகிய மேனி, பகைவர்களை வெல்பவன், சிறந்த அறிவாளி, பணிவுள்ளவன், தூய மேனியுடையவன், நல்ல பெயரும் புகழும் மிக்கவன்.
18. தாரண ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது பதினெட்டாவது ஆண்டாகும்.
2. தாரண ஆண்டின் அதிதேவதை : படரன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : நெடிய மேனி, தாமரை
மலரையொத்த கண்கள், நடனம்
மற்றும் வாத்தியங்களில் ஈடுபாடு
புலியின் கால்கள் போன்ற
கால்கள், யானையின் முகம்
போன்ற முகம்.
மலரையொத்த கண்கள், நடனம்
மற்றும் வாத்தியங்களில் ஈடுபாடு
புலியின் கால்கள் போன்ற
கால்கள், யானையின் முகம்
போன்ற முகம்.
5. தாரண ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
அயோக்கியன், சூரன், சஞ்சல புத்தியுடையவன், கலைகளைக் கற்றுணர்ந்தவன், உறுதி மிக்கவன், இகழத்தக்க செயல்கள் புரிபவன், செல்வந்தன்.
19. பார்த்திவ (ப) ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது பத்தொன்பதாவது ஆண்டாகும்.
2. பார்த்திவ ஆண்டின் அதிதேவதை : பதங்கன் (சூரியன்)
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : நீள் கழுத்து, செந்நாயின் வயிறு
போன்ற வயிறு, தடியைவைத்துக்
கொண்டிருப்பவர், பருத்த உதடு.
போன்ற வயிறு, தடியைவைத்துக்
கொண்டிருப்பவர், பருத்த உதடு.
5. பார்த்திவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
தன் செயல்களைச் செய்பவன், அரச தர்மம் அறிந்தவன், கலைகளில் திறமை மிக்கவன், சிறப்பாக வாழ்பவன், அரசகுலத் தோன்றலுமாவான்.
20. விய ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம் :
1. அறுபது ஆண்டுகளில் இது இருபதாவது ஆண்டாகும்.
2. விய ஆண்டின் அதிதேவதை : ஸ்வர்ணரன்
3. அதிதேவதையின் நிறம் : சிவப்பு
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம் : நீண்ட முகம், சிவந்த கண்கள்,
நீண்ட கேசங்கள், சத்தியம்
பேசுபவர், அதிக செலவு
செய்பவர்.
நீண்ட கேசங்கள், சத்தியம்
பேசுபவர், அதிக செலவு
செய்பவர்.
5. விய ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
சுகமற்றவன், துன்பங்களையே துய்ப்பவன், பயந்த குணமுடையவன், கடன் வாங்குவதே முக்கிய செயல், நிலையற்ற மனம், பெரிய செலவாளி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக