வெள்ளி, 28 டிசம்பர், 2012

ASTROLOGY - 39 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


31.  ஹேவிளம்பி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்தொன்றாவது ஆண்டாகும்.
2. ஹேவிளம்பி ஆண்டின் அதிதேவதை   : ஆதித்யன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : சோர்வடைந்த மேனி, சிவந்த  
                                                                        கண்கள், தாயின் அருகில்  
                                                                        உள்ளவர், புத்திமான்.
5. ஹேவிளம்பி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     ஏராளமான குதிரைகள், பொன், ஆடைகள், தானியம், இரத்தினங்கள் இவைகள் வாய்க்கப்பெற்றவன், மனைவி மக்களால் நன்மை பெறுபவன், சிறந்த சேமிப்பாளன்.


32.  விளம்பி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்திரண்டாவது ஆண்டாகும்.
2. விளம்பி ஆண்டின் அதிதேவதை            : ஸவிதா 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : கொடுமையினால் சோர்வடைந்த 
                                                                        மேனி, சிவந்த கண்கள், தாயின்  
                                                                        அருகில் இருப்பவர், புத்திமான்.
5. விளம்பி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     அயோக்கியன், பேராசையுள்ளவன், அல்பபுத்தியுள்ளவன், சோம்பேறி, குளிர்ச்சி மேலிட்டவன், துவங்கிய செயல் குறித்துப் புலம்புபவனாயும் இருப்பவன்.


33.  விகாரி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து மூன்றாவது ஆண்டாகும்.
2. விகாரி ஆண்டின் அதிதேவதை              : அருக்கன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : புருவங்களுக்கிடையில் துதிக்கை,  
                                                                        உலக்கையாயுதம், மலை போன்ற  
                                                                        தோற்றம், சிம்சுபா மரத்தடியில் 
                                                                        வீற்றிருப்பவர். 
5. விகாரி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     தீச்செயல்களில் ஈடுபாடு கொண்டவன், கலைகளைக் கற்றுணர்ந்தவன், ஏமாற்றுவதில் தலைசிறந்தவன், சஞ்சலபுத்தி உடையவன், அயோக்கியன், அதிகமாகப் பேசுபவன், நண்பர்களிடத்தும் விபரீதமான எண்ணம் கொண்டவனாவான்.  

34.  சார்வரி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து நான்காவது ஆண்டாகும்.
2. சார்வரி ஆண்டின் அதிதேவதை             : பாஸ்கரன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : புருவங்களுக்கிடையில் துதிக்கை,  
                                                                        உலக்கையாயுதம், மலை போன்ற 
                                                                        தோற்றம், சிம்சுபா மரத்தடியில் 
                                                                        வீற்றிருப்பவர். 
5. சார்வரி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     சிறந்த வணிகன், விளையாட்டில் ஈடுபாடு, நண்பர்களுக்கு உதவாதவன், பலவிதமான கலைகளைக் கற்பதில் ஈடுபாடு உடையவன். 




35.  பிலவ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து ஐந்தாவது ஆண்டாகும்.
2. பிலவ ஆண்டின் அதிதேவதை               : அக்கினி 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : ஓடங்களுடன் கூடிய சமுத்திரம்  
                                                                        இருப்பிடம், குதிரைகளைக் 
                                                                        காப்பவர், எல்லா 
                                                                        உலகங்களுக்கும் செல்பவர். 
5. பிலவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     காமம் மிக்கவன், பெரிய செல்வந்தன், அடிமைத் தொழிலில் நாட்டம், மனைவியின் எண்ணப்படி நடப்பவன், தன மனதை வெளிக்காட்டாதவன், சஞ்சல புத்தியுள்ளவன்.




36.  சுபகிருது ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து ஆறாவது ஆண்டாகும்.
2. சுபகிருது ஆண்டின் அதிதேவதை          : ஜாதவேதன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : காட்டில் சந்தன மரத்தடி 
                                                                        இருப்பிடம், புத்தர்கள் வேடம்,  
                                                                        விபூதி, ருத்ராக்ஷம் அணிந்தவர்.  
5. சுபகிருது ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     எல்லா புலன்களும், கல்வியும், அடக்கமும் மிக்கவர்கள், புண்ணிய கர்மாக்களாலே நீண்ட ஆயுள் உடையவர், மழலைச்செல்வம் மற்றும் எல்லாச்செல்வமும் நிரம்பப் பெற்றவர்.




37.  சோபகிருது ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து ஏழாவது ஆண்டாகும்.
2. சோபகிருது ஆண்டின் அதிதேவதை      : ஸ்ஹௌஜஸன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : காட்டில் சந்தன மரத்தடி 
                                                                        இருப்பிடம், புத்தர்கள் வேடம்,  
                                                                        விபூதி, ருத்ராக்ஷம் அணிந்தவர்.    
5. சோபகிருது ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     எல்லாவிதத்திலும் மேன்மை பெற்றவர், நற்குணங்கள் மிக்கவர், இரக்ககுணம் மிக்கவர், நற்செயல்கள் புரிபவர், எல்லாவற்றிலும் வெற்றி பெறுபவர், அடக்கம் உடையவர், நற்செயல்களைச் செய்யும் சாமார்த்தியம் உள்ளவர்.




38.  குரோதி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து எட்டாவது ஆண்டாகும்.
2. குரோதி ஆண்டின் அதிதேவதை            : அஜிராப்ரபு  
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : புலிகளால் சூழப்பட்டவர், பயந்த 
                                                                        தன்மை, பசியினால் வருந்திய  
                                                                        தோற்றம், குள்ளமான உருவம், 
                                                                        மஹாவிஷ்ணுவை தியானிக்கும் 
                                                                        கோலம்.     
5. குரோதி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     கொடூரமான பார்வையும், கொடூரமான தன்மையும், பெண்களுக்கு விருப்பமானவனாயும், கர்வம் மிக்கவனாயும், பிறர் செயல்களை முடிவடையும் தருணத்தில் தடுப்பவன் ஆகவும், கோபமுடையவனாயும் இருப்பான்.




39.  விசுவாவசு ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முப்பத்து ஒன்பதாவது ஆண்டாகும்.
2. விசுவாவசு ஆண்டின் அதிதேவதை       : வைசுவாநரன்  
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : காட்டில் நீரில்லா நிலம்   
                                                                        இருப்பிடம், குட்டையின்  
                                                                        படிக்கட்டு, எங்கும் நிறைந்தவர். 
5. விசுவாவசு ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     நல்ல புதல்வன் மற்றும் மனைவியைப் பெற்றவன், கொடையாளி, நற்குணம் மிக்கவன், நல்லொழுக்கத்தில் நிலைத்தவன், தைரியசாலி, விருப்பமான உணவை உட்கொள்பவன் மற்றும் எல்லா குணங்களாலும் மேம்பட்டவன் ஆவான். 




40.  பராபவ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பதாவது ஆண்டாகும்.
2. பராபவ ஆண்டின் அதிதேவதை             : நரியாபஸன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : தாமரையில் வீற்றிருப்பவர்,  
                                                                        இளமைப் பருவம், இறுமாப்பான 
                                                                        தோற்றம். 
5. பராபவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     செல்வம் மற்றும் தானியத்தை சேர்க்கவியலாதவன், மிகவும் கொடுமையான வாக்கியங்களைப் பேசுபவன், கொஞ்சம் ஆசாரமும் அயோக்கியத்தனமும் நிறைந்தவன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக