வெள்ளி, 20 ஜூலை, 2012

பைபிள் பொன்மொழிகள் சிலவற்றைக் கேட்போமா!


*   இளைஞர்கள் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி    வீழ்வர். ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் புதிய ஆற்றல்  பெறுவர்.

*   தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக்  கேட்டையும் இழிவையும் வருவித்துக் கொள்கிறான்.

*   மனக்கவலையை ஒழியுங்கள், உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள், குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியதாகும்.

*   இளைஞரே! நீங்கள் வலிமை வாய்ந்தவர்கள், கடவுளின் வார்த்தை உங்களுக்குள் நிலைத்திருக்கிறது.

*   நீ இளவயது இச்சைகளை விட்டு ஓடிவிடு. தூய்மையான உள்ளத்தோடு கடவுளின் பெயரை அறிக்கையிட்டு வழிபடுவோருடன் நீதி, நம்பிக்கை, அன்பு, அமைதி ஆகியவற்றை நாடித் தேடு.

*   நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள்.

*   உன் சகோதரர்கள் ஏழ்மைப்பட்டு இளைத்துப் போனால், அவர்களுக்கு உதவு. அவர்கள் அன்னியர் போலும் விருந்தினர் போலும் உன்னோடு வாழட்டும்.

*   ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கிறவர் கடவுளுக்கு கடன் கொடுப்பவராக  மாறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக