ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

தமிழா! தமிழா!! தமிழா!!!..


உலகமெங்கும்
உதை படும், மிதி படும் தமிழா....!!!

உன்னுடைய குறை என்னவென்று
என்றாவது நீ எண்ணியதுண்டா..???

ஒற்றுமையின்மையும், பொறாமையும்
உன்னுடன் ஒட்டி பிறந்த இரட்டை குணங்கள்.

உலகிலுள்ள மற்ற இனத்தவரெல்லாம்
தன் இனம் என்றறிந்ததும்,
அவரவர் தன் தாய் மொழியில் பேசும் போது...

தமிழன் மட்டும்
"அயலான் மொழி" ஆங்கிலத்தில் பேசுவான்...

மற்றவர்களின் வளர்ச்சியில் சந்தோசம் காணும் நீ..
உன் இனம் உயர்ந்தால் உனக்கு பிடிக்காது.....!!!!!

விலாசமின்றி வந்தவனுக்கு விசுவாசமாய் இருப்பாய்..
உடன் பிறந்த சகோதரனை வீழ்த்த நினைப்பாய்....!!!!

மற்றவர்களின் போட்டி, வளர்ச்சியில்...

தமிழனின் போட்டி, தமிழனில் வீழ்ச்சியில்...

தமிழனை காட்டி கொடுப்பதும், வீழ்த்த நினைப்பதும்
தமிழன் மட்டுமே.....!!!!!!

இன்று தமிழ்நாட்டில்
வந்த இனமெல்லாம் வளர்ச்சியின் உச்சியில்....
உலகாண்ட தமிழன் இன்று வீதிகளின் ஓரத்தில்...

"எழு" என்றாலும் அவன் எழப்போவதில்லை...
"விழி" என்றாலும் அவன் விழிக்கப்போவதில்லை...
போதையின் பிடியில் அவன் இன்று...!!

வீரத்திற்கு பெயர் போன என் தமிழினம் - இன்று
கேட்பாரன்று வீழ்ந்து கிடக்குதே இந்த பாரினிலே...

நன்றி : மு. மன்சூர் அலி....

Courtesy : Tirunelveli saiva pillai, VOC vagaiyara.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக