செவ்வாய், 8 அக்டோபர், 2013

THIRUMANTIRAM - 88 : திருமாலும் நான்முகனும் காணஇயலாத வடிவு.


88.                        அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்              
                             படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி  
                             அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல    
                             முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.
Bookmark and Share

Birth Certificate : பிறப்புச் சான்றிதல் பெறுவது எப்படி?


     குழந்தை பிறந்தவுடன் அதன் 'குவா, குவா' சத்தத்தை காது குளிர கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே குழந்தையின் பிறப்பை உறுதி செய்யும் பிறப்பு சான்றிதழை பெறும் முயற்சியில் இறங்குவது மிகவும் முக்கியம்.
Bookmark and Share

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

Tension People : இறுக்க முக மனிதர்கள்.


     மனிதர்களுள் பல வகை உண்டு. சிலர் எப்போதும் சிரித்துக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பார்கள். சிலர் சிடுசிடு என முகத்தை வைத்திருப்பார்கள். சிரித்துக்கொண்டிருந்தால் நோய் அணுகாது என டாக்டர்கள் கூறுவார்கள். ஆனாலும் மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு என பலவற்றிக்கும் மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.
Bookmark and Share

சனி, 5 அக்டோபர், 2013

THIRUMANTIRAM - 87 : உலகமும் உயிரும் வாழச் செய்வது திருமந்திரம்.


87.                        அங்கி மிகாமை வைத்தான் உடல்; வைத்தான்             
                             எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்;
                             தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம் 
                             பொங்கி மிகாமை வைத்தான் பொருள்தானுமே.
Bookmark and Share

வியாழன், 3 அக்டோபர், 2013

ASTROLOGY - 47 : பஞ்சாங்கம்.


6. சோதிடவியலில் திதி சுக்கில ஷஷ்டியின் தன்மை :

    ஷஷ்டி திதி தேவதையின் நிறம்             : சிவப்பு 
    ஷஷ்டி திதி தேவதையின் கைகள்          : கோழியுடன் கூடியது   
    ஷஷ்டி திதி தேவதையின் வாகனம்       : மயில்    
    ஷஷ்டி திதி தேவதையின் ஆயுதம்        : பாத்திரம்     
    ஷஷ்டி திதியின் அபிமான தேவதை      : முருகன்  
    ஷஷ்டி திதியின் விஷநாடி (சாராவளிப்படி) : 20 நாழிகைகளுக்கு மேல் 
                                                                                 4 நாழிகைகள்.
Bookmark and Share

செவ்வாய், 1 அக்டோபர், 2013

Pomegranate : இருமல் நீக்கும் மாதுளம்பழம் பகுதி - 2.


     மாதுளையின் எல்லா பகுதிகளுமே மருத்துவ குணம் கொண்டது. மாதுளம் பூ, ரத்த வாந்தி, ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு மற்றும் உடல் சூட்டை தணிக்கும். மாதுளம் பூவை கஷாயம் வைத்துக் குடித்தால், தொண்டை தொடர்புடைய பல பிணிகள் நீங்கும்.
Bookmark and Share

THIRUMANTIRAM - 86 : நூலைக் கற்கத் தக்கவர்.


86.                        பிறப்பு இலி நாதனை, பேர்நந்தி தன்னைச்            
                             சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி       
                             மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை 
                             உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே.  
Bookmark and Share

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

THIRUMANTIRAM - 85 : சிவம் வந்து உங்களுடன் பொருந்திவிடும்.


85.                        நான் பெற்ற இன்பம் பெருகஇவ் வையகம்;           
                             வான்பற்றி நின்ற மறைப்பொருள், சொல்லிடின்      
                             ஊன்பற்றி நின்ற உணர்வுஉறு மந்திரம் 
                             தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.  
Bookmark and Share

Pomegranate : மாதுளம்பழம்.


     முத்துக்களைப் பதுக்கி வைத்தவாறு இருக்கும் மாதுளை பழத்தின் அமைப்பை பார்க்கவே அம்சமாக இருக்கும். சாதாரணமாக, மாதுளம்பழத்தை உண்பவர்கள், பழத்தின் உட்புறம் இருக்கும் முத்து போன்ற பகுதியின் சாரத்தை மட்டும் சாப்பிட்டு, விதைகளை துப்பி விடுவர். ஆனால் விதைகளில்தான் சத்துக்கள் பொதிந்திருக்கின்றன.
Bookmark and Share

சனி, 28 செப்டம்பர், 2013

THIRUMANTIRAM - 84 : வேதச்சொல்லையும் பொருளையும் உணர்த்தல்.


84.                        சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்            
                             உத்தம மாகவே ஓதிய வேதத்தின்     
                             ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி      
                             அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.  
Bookmark and Share

Terminalia Chebula : அமுதம் போன்ற கடுக்காய்!


     நமது உடலில் நோய் தோன்ற, உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன் அளவில் இருந்து கூடுவதும், குறைவதுமே காரணம். உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சில எளிய வழிமுறைகளை கூறியுள்ளார்.
Bookmark and Share

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

THIRUMANTIRAM - 83 : திருமூலர் வந்தவழி.


83.                        செல்கின்ற வாற்றில் சிவன்முனி சித்தசன்           
                             வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்     
                             பல்கின்ற தேவ ரசுரர் நரர்தம்பால்      
                             ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.   
Bookmark and Share

செவ்வாய், 23 ஜூலை, 2013

The holy month of Aadi : தெய்வீகமான ஆடி மாதம்!


      பட்டி, தொட்டி எங்கும் பிரபலமான மாதம். முளைப்பாலிகை ஏந்திப் பெண்கள் ஊர்வலமாகப் போய்க் கொண்டாடும் மாதம். சீறிப் பாய்ந்து சுழன்றோடும் ஆற்றில் வாலிபர்கள் வாகாகப் பாய்ந்து கும்மாளம் போடும் மாதம். வேப்பிலை உடையணிந்து வினைகளைத் தீர்க்கப்பெறும் மாதம். வளையல்களை நொறுக்கி அம்பிகை தன்னை வெளிப்படுத்திய மாதம்.
Bookmark and Share

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கல்விக் கடவுள்! அற்புத மனிதன்!


     சமீபத்தில் இரு வேறு அனுபவங்கள். முதல் நிகழ்வு ஓர் ஆன்மிகப் பெரியவர் நடத்திய கல்வி யாகம், வேள்வி, பூஜை, வழிபாடு. இரண்டாம் நிகழ்வு இன்னொரு பெரியவர் நடத்திய கல்வி உதவித் தொகை வழங்கும் திருவிழா, கல்வி யாகம், ஞான வேள்வி, அறிவுப் பூஜை, வழிபாடு. ஆன்மிக யாகம், அதற்கே உரித்தான அத்தனை அடையாளங்களோடும் பரபரப்போடும் ஆன்மிகத் தேடலோடும் நடந்தது.
Bookmark and Share

THIRUMANTIRAM - 82 : திருவடியின் கீழ் இருந்தேன்!


82.                        ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு          
                             ஊனமி ல்ஒன்பது கோடி யுகந்தனுள்    
                             ஞானப்பா லாட்டி நாதனை யர்ச்சித்து    
                             நானு மிருந்தேன்நற் போதியின் கீழே.   
Bookmark and Share

சனி, 20 ஜூலை, 2013

ASTROLOGY - 46 : பஞ்சாங்கம்


     பஞ்சாங்கம் எனும் சொல் எல்லோராலும் நன்கு அறியப்பட்டதே. இதன் பொருளை அறிந்தோ அறியாமலோ பலர் இச்சொல்லை உபயோகிக்கின்றனர். எடுத்துக்காட்டாக 'பழைய பஞ்சாங்கம்' 'அபத்த பஞ்சாங்கத்திற்கு அறுபது நாழிகையும் தியாஜ்யம்' என்றெல்லாம் கூறுவர். இச்சொல்லின் பொருள் என்ன?
Bookmark and Share

THIRUMANTIRAM - 81 : தமிழ் செய்யுமாறு என்னைப் படைத்தான்!


81.                        பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?         
                             முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்;  
                             என்னை நன்றாக இறைவன் படைத்தனன்  
                             தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.  
Bookmark and Share

வெள்ளி, 19 ஜூலை, 2013

Betel Leaf : வெற்றிலை ( பசும் தங்கம் )


     பசும் தங்கமா அப்படி ஓன்று இருக்கிறதா? அது எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்களா?  நம் வாழ்வில் கலந்த 'வெற்றிலை'தான் 'பசும் தங்கம்.' நம் ஊரில் திருமணங்கள் இது இல்லாமல் ஆரம்பிக்காது. இது கொடுக்காமல் முடிவடையாது. விருந்துகளுக்குப் போனால் கடைசியில் இதை போட்டால்தான் முழுதிருப்தி. பிரசவித்த பெண்ணை தினமும் இதை கட்டாயம் சாப்பிட சொல்லி வற்புறுத்துவார்கள்.
Bookmark and Share

புதன், 17 ஜூலை, 2013

THIRUMANTIRAM - 80 : இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன்!


80.                        இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி;         
                             இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே;  
                             இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே; 
                             இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே.  
Bookmark and Share

ASTROLOGY - 45 : மாதங்கள்.


7. சோதிடவியலில் ஆசுவயுஜ மாதத்தின் தன்மை :

1. ஆசுவயுஜ மாத தேவதையின் நிறம்          : சிவப்பு   

2. ஆசுவயுஜ மாத தேவதையின் பெயர்         : இஷன்  

3. ஆசுவயுஜ மாத தேவதையின் வாகனம்    : சிறந்த கரடி   

4. ஆசுவயுஜ மாத தேவதையின் கைகள்       : பன்னிரெண்டு கைகள்
Bookmark and Share

ஞாயிறு, 30 ஜூன், 2013

THIRUMANTIRAM - 79 : சிவன் திருப்பெயரை எண்ணியிருந்தேன்.


79.                        சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்         
                             சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்துறை;  
                             சேர்ந்திருந் தேன்சிவபோதியின் நீழலில்; 
                             சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. 
Bookmark and Share

ஞாயிறு, 26 மே, 2013

Pear : பேரிக்காய்!


     சீசன் காலங்களில் மட்டும் கிடைக்கக்கூடியது பேரிக்காய். காய் என்ற அடைமொழியுடன் இருந்தாலும், இது உண்மையில் ஒரு வகை பழம்தான். மலைப்பகுதியில் விளையும் இந்த பேரிக்காயில், ஆப்பிளில் கூட இல்லாத நிறைய சத்துக்கள் உள்ளன.
Bookmark and Share

புதன், 22 மே, 2013

THIRUMANTIRAM - 78 : இறைவியின் திருவடியைத் சேர்ந்திருந்தேன்.


78.                        நேரிழை ஆவாள் நிரதிச யானந்தப்       
                             பேருடை யாள்; என் பிறப்பு அறுத்து ஆண்டவள்; 
                             சீருடையாள்; சிவன் ஆவடு தண்துறைச் 
                             சீருடை யாள்பதம் செர்ந்திருந் தேனே. 
Bookmark and Share

செவ்வாய், 21 மே, 2013

ASTROLOGY - 44 : மாதங்கள்.


     மாதங்கள் இருவகைப்படும். 1. சாந்திரமானம் 2. சௌரமானம்.

     சூரியனும் சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் காணப்படுவது அமாவாசை எனப்படும். அமாவாசைக்கு மறுநாளிலிருந்து புதிய மாதம் ஆரம்பமாகும். இவ்வழக்கம் ஆந்திரம், கர்நாடகம் மற்றும் இந்திய பொது மாத வழக்கிலும் காணப்படுகிறது. இவ்வகை மாதங்களுக்கு சாந்திரமான மாதங்கள் என்று பெயர். சந்திரன் சூரியனுடன் சேர்ந்திருப்பதைக் கணக்கிட்டு மாதங்கள் கணக்கிடப்படுவதால் சாந்திரமான மாதங்கள் எனப்படுகிறது. இவை மொத்தம் பன்னிரெண்டு மாதங்களாகும். அவையாவன :
Bookmark and Share

திங்கள், 20 மே, 2013

Fenugreek : வெந்தயம் - வெந்தயக் கீரை.


     நம் நாட்டில் வெந்தயக்கீரையின் மகத்துவத்தினை அனைவருமே அறிந்து இருப்பார்கள். கீரை வகைகளில் பலவகை உண்டு. அவற்றில் பலவகை மருத்துவ குணம் வாய்ந்தவைகளாக இருப்பது போல் வெந்தயக்கீரையிலும் சில மருத்துவ குணங்கள் உண்டு.
Bookmark and Share

ஞாயிறு, 19 மே, 2013

Jackfruit : பலாப்பழம்! (பழங்களின் அரசன்)


     முக்கனிகள் பட்டியலில் இடம் பிடித்த கனி பலாப்பழம். பார்க்க முட்தோலுடன் கரடு முரடாக இருந்தாலும், தித்திக்கும் சுளைகளுடன், மயக்கும் மணத்துடன், சாப்பிடுபவர்களுக்கு பலன் தரும் கனி. மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரியது என்ற பெயர் பெற்றது. தமிழகம், கேரளாவில் அதிகமான அளவு விளைகின்றது.
Bookmark and Share

சனி, 18 மே, 2013

ASTROLOGY - 43 : ருதுக்கள்.


ஒரு ஆண்டில் ருதுக்கள் மொத்தம் ஆறு ஆகும். அவையாவன : 
     1. வசந்த ருது, 2. கிரீஷ்ம ருது, 3. வருஷ ருது, 4. சரத் ருது, 5. ஹேமந்த ருது, 6. சிசிர ருது. 

சித்திரை மாதமும், வைகாசி மாதமும்                                           - வசந்த ருது.
ஆனி மாதமும், ஆடி மாதமும்                                                      - கிரீஷ்ம ருது.
ஆவணி மாதமும், புரட்டாசி மாதமும்                                           - வருஷ ருது.
ஐப்பசி மாதமும், கார்த்திகை மாதமும்                                               - சரத் ருது.
மார்கழி மாதமும், தை மாதமும்                                                - ஹேமந்த ருது.
மாசி மாதமும், பங்குனி மாதமும்                                                      - சிசிர ருது.

Bookmark and Share

THIRUMANTIRAM - 77 ஐந்தொழிற் கூத்தைக் கூற வந்தேன்!


77.                        மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்       
                             நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு 
                             மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் 
                             சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.
Bookmark and Share

வெள்ளி, 17 மே, 2013

Piles : மூல நோய்க்கு தீர்வில்லையா?


     சித்த மருத்துவத்தில் மூல மூளையின் அமைப்பு, வடிவம், நோயினுடைய இயல்பு இவற்றை அடிப்படையாக வைத்து 21 வகையாக பிரித்துள்ளனர்.

     அமில பித்த தொத்தமிலாது மூலம் வராது - என்பது சித்தர்கள் வாக்கு. மூலத்தை உள்மூலம், வெளிமூலம் என பொதுவாக இரண்டு வகையாக பிரிக்கலாம். மூலத்திற்கு முதல் காரணம் மலச்சிக்கல். உண்ணும் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டாலே மூலம் வராது. மூல நோய் என்பது ஆசனவாயில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் காணப்படும் சிறு இரத்தக் கட்டிகளாகும். ஒரே இடத்தில் உட்கார்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதால் ஆசனவாயில் சூடு ஏற்படுகிறது. அது வெளியேறமுடியாமல் ஆசனவாயின் உட்புறத்தை தாக்குகிறது. இதனால் மூலத்தில் சூடு ஏற்பட்டு மூல நோய் உண்டாகிறது.
Bookmark and Share

வியாழன், 16 மே, 2013

ASTROLOGY - 42 : அயனங்கள்.


     ஆண்டுகளுக்கு அடுத்து அயனங்கள். அவைகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

அயனங்கள் இருவகைப்படும். அவையாவன : 
                                       1. உத்தராயனம். 2. தட்சிணாயனம்.
Bookmark and Share

புதன், 15 மே, 2013

THIRUMANTIRAM - 76 ஆராய்ச்சியால் உண்மையை உணர்ந்தேன்!


76.                        சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்       
                             மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்    
                             இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி  
                             உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால். 
Bookmark and Share

திங்கள், 13 மே, 2013

ASTROLOGY - 41 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


51.  பிங்கள ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்தொன்றாவது ஆண்டாகும்.
2. பிங்கள ஆண்டின் அதிதேவதை             : கிருஷ்ணன்
3. அதிதேவதையின் நிறம்                          : நீலம்       
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : சிவந்த முகம், சிவந்த கண்கள்,  
                                                                         வேப்பமரத்தடியில் இருப்பவர். 
5. பிங்கள ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       பொன்னிறமான கண்கள், இகழத்தக்க செயல்புரிபவன், நிலையற்ற புகழ் பெற்றவன், கொடையாளி, மேன்மை பெற்றவன், பிறருக்கு தீங்கு செய்பவன், கொடூரமான சொற்களை உடையவன்.
Bookmark and Share

ஞாயிறு, 12 மே, 2013

THIRUMANTIRAM - 75 சிதாகாயத்தில் பொருந்தியிருந்தேன்.


75.                        இருந்தவக் காரணங் கேளிந் திரனே       
                             பொருந்திய செல்வப் புவனா பதியாம்    
                             அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன் 
                             பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.
Bookmark and Share

செவ்வாய், 7 மே, 2013

வேளாளர் சமூகம் ஒரு பார்வை!


     அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதலை வேட்கையும் கண்டு பரங்கியர் நடுநடுங்கினார்கள். அவனோடு நேருக்குநேர் பேசியோ போரிட்டோ அவனை வெல்லமுடியாது என்று முடிவு கட்டிய வெள்ளையர்கள், அவனை சிறைப் பிடித்தவுடன் தூக்கிலிட்டார்கள். அப்போதும் ஆத்திரம் அடங்கவில்லை. அவன் தலையை வெட்டித் துண்டித்து ஈட்டியில் குத்தி காட்சிப் பொருளாக நடுச்சந்தியில் நட்டு வைத்தார்கள்.
Bookmark and Share

புதன், 24 ஏப்ரல், 2013

ASTROLOGY - 40 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


41.  பிலவங்க ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது நாற்பத்தியோராவது ஆண்டாகும்.
2. பிலவங்க ஆண்டின் அதிதேவதை         : பங்க்திராதஸன் 
3. அதிதேவதையின் நிறம்                          : சிவப்பு  
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : தாமரையின் எதிரில் நிற்பவர்.  
                                                                        இளமைப் பருவம், இறுமாப்பான 
                                                                        தோற்றம். 
5. பிலவங்க ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     சஞ்சலபுத்தி, நற்செயல்களில் ஈடுபாடு இல்லாதவன், அயோக்கியன், ஒழுக்கமற்றவன்.
Bookmark and Share
Pages (24)123456 Next