செவ்வாய், 21 மே, 2013

ASTROLOGY - 44 : மாதங்கள்.


     மாதங்கள் இருவகைப்படும். 1. சாந்திரமானம் 2. சௌரமானம்.

     சூரியனும் சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் காணப்படுவது அமாவாசை எனப்படும். அமாவாசைக்கு மறுநாளிலிருந்து புதிய மாதம் ஆரம்பமாகும். இவ்வழக்கம் ஆந்திரம், கர்நாடகம் மற்றும் இந்திய பொது மாத வழக்கிலும் காணப்படுகிறது. இவ்வகை மாதங்களுக்கு சாந்திரமான மாதங்கள் என்று பெயர். சந்திரன் சூரியனுடன் சேர்ந்திருப்பதைக் கணக்கிட்டு மாதங்கள் கணக்கிடப்படுவதால் சாந்திரமான மாதங்கள் எனப்படுகிறது. இவை மொத்தம் பன்னிரெண்டு மாதங்களாகும். அவையாவன :

            1. சைத்திரம், 2. வைசாகம், 3. ஜியேஷ்டம், 4. ஆஷாட, 5. ஸ்ராவணம், 6. பாத்திரபதம்,  7. ஆச்வயுஜம்,  8. கார்த்திகம், 9. மார்கசீர்ஷம், 10. புஸ்யம், 11. மாகம், 12. பால்குநம் ஆகும். சூரியன் ஓர் இராசியிலிருந்து மற்றொரு இராசிக்குப் பிரவேசிப்பதை மாதம் அல்லது சங்க்ரமணம் என்று கூறுவர். சூரியனைக் கொண்டு மாதங்கள் கணக்கிடப்படுவதால் இவை சௌரமான மாதங்கள் எனப்படும். இவையும் மொத்தம் பன்னிரெண்டு மாதங்களாகும். அவையாவன :



                      1. மேஷ மாதம், 2. ரிஷப மாதம், 3. மிதுன மாதம், 4. கடக மாதம், 5. சிம்ம மாதம்,      6. கன்யா மாதம்,        7. துலா மாதம்,    8. விருச்சிக மாதம், 9. தனுர் மாதம், 10. மகர மாதம், 11. கும்ப மாதம், 12. மீன மாதம். இவையே தமிழில் கீழ்க்கண்ட மாதங்களாகக் கூறப்படுகின்றன.

                 1. சித்திரை, 2. வைகாசி, 3. ஆனி, 4. ஆடி, 5. ஆவணி, 6. புரட்டாசி, 7. ஐப்பசி, 8. கார்த்திகை, 9. மார்கழி, 10. தை, 11. மாசி, 12. பங்குனி. 

     இந்த மாதங்களைப் பற்றி மேலும் சில விவரங்களைப் காண்போம்.



1. சோதிடவியலில் சைத்திர மாதத்தின் தன்மை :

1. சைத்திர மாத தேவதையின் நிறம்            : சிவப்பு 

2. சைத்திர மாத தேவதையின் பெயர்           : மது 

3. சைத்திர மாத தேவதையின் ஆயுதங்கள் : சங்கு, சக்கரம் 

4. சைத்திர மாத தேவதையின் தலைகள்     : கிரீடத்துடன் கூடிய தலை.

5. சைத்திர மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : நற்செயல்கள் புரிபவன், கல்வியறிவு மிக்கவன், சுகபோகங்களைத் துய்ப்பவன், சுவையான உணவை உண்பவன், ஆலோசனை கூறத்தக்கவன்.



2. சோதிடவியலில் வைசாக மாதத்தின் தன்மை :

1. வைசாக மாத தேவதையின் நிறம்                    : வெண்மை 

2. வைசாக மாத தேவதையின் பெயர்                   : மாதவன்  

3. வைசாக மாத தேவதையின் ஆயுதங்கள் : கௌமோதகி எனும் கதை, சாரங்கம் எனும் வில்.  

4. வைசாக மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : பிள்ளையிடம் அளவற்ற பாசம் உள்ளவன், ஆரோக்கியமான தேகம் உடையவன், அந்தணரிடத்தும், தேவதைகளிடத்தும் பக்தியுள்ளவன், நீண்ட ஆயுள் உள்ளவன், நீரில் செல்லும் கப்பல் போன்றவற்றில் பிரயாணம் செய்பவன்.


3. சோதிடவியலில் ஜ்யேஷ்ட மாதத்தின் தன்மை :

1. ஜ்யேஷ்ட மாத தேவதையின் நிறம்          : வெண்மை  

2. ஜ்யேஷ்ட மாத தேவதையின் பெயர்         : சுக்கிலன் 

3. ஜ்யேஷ்ட மாத தேவதையின் வாகனம்    : புலி  

4. ஜ்யேஷ்ட மாத தேவதையின் கண்கள்     : மூன்று 

5. ஜ்யேஷ்ட மாத தேவதையின் கைகள்      : ஆறு  

6. ஜ்யேஷ்ட மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : பொறுமையுடையவன், நிலையற்ற மனதையுடையவன், வெளிநாட்டில் வசிக்க விரும்புபவன், பெருமுயற்சி உடையவன், நீண்ட காலம் ஆலோசிப்பவன்.




4. சோதிடவியலில் ஆஷாட மாதத்தின் தன்மை :

1. ஆஷாட மாத தேவதையின் நிறம்             : சிவப்பு   

2. ஆஷாட மாத தேவதையின் பெயர்            : சுசி 

3. ஆஷாட மாத தேவதையின் வாகனம்       : கருடன்   

4. ஆஷாட மாத தேவதையின் கைகள்         : நான்கு  

5. ஆஷாட மாத தேவதையின் தலைகள்     : இரண்டு 

6. ஆஷாட மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : அதிக செலவு செய்பவன், அதிகமாகப் பேசுபவன், தவறுகள் புரிபவன், ஆசிரியர்களிடத்தில் அன்புடையவன். நற்செயல்கள் புரிபவன், தற்பெருமை கொண்டவன், அஜீரணம் உள்ளவன்.




5. சோதிடவியலில் ஸ்ராவண மாதத்தின் தன்மை :

1. ஸ்ராவண மாத தேவதையின் நிறம்          : பச்சை    

2. ஸ்ராவண மாத தேவதையின் பெயர்         : நபஸ்  

3. ஸ்ராவண மாத தேவதையின் வாகனம்    : மான்    

4. ஸ்ராவண மாத தேவதையின் கைகள்       : பத்து கைகள்   

5. ஸ்ராவண மாத தேவதையின் தலைகள்   : ஐந்து முகங்கள் 

6. ஸ்ராவண மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : பிள்ளைகள், மனைவி, பேரன், பேத்தி, நண்பர்கள் இவர்களுடன் கூடி இன்பமாய் வாழ்பவன், தந்தை சொற்படி நடப்பவன், புகழ் பெற்றவன், சுபம் மிகுந்தவன், கொடையாளி, நற்குணங்கள் மிக்கவன்.




6. சோதிடவியலில் பாத்திரபத மாதத்தின் தன்மை :

1. பாத்திரபத மாத தேவதையின் நிறம்           : வெண்மை   

2. பாத்திரபத மாத தேவதையின் பெயர்          : நபஸியன்   

3. பாத்திரபத மாத தேவதையின் வாகனம்     : ராஜஹம்சம்     

4. பாத்திரபத மாத தேவதையின் கைகள்        : எட்டு கைகள்   

5. பாத்திரபத மாத தேவதையின் தலைகள்    : நான்கு முகங்கள் 

6. பாத்திரபத மாதத்தில் பிறந்தவர்களின் பலன் : செல்வந்தன், இளைத்த மேனியை உடையவன், கொடையாளி, மனைவி மற்றும் மக்கட்செல்வத்தால் நன்மை அடைபவன், சுக துக்கங்களில் மாறாத மனதை உடையவன், அயோக்கிய குணம் உடையவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக