திங்கள், 13 மே, 2013

ASTROLOGY - 41 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


51.  பிங்கள ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்தொன்றாவது ஆண்டாகும்.
2. பிங்கள ஆண்டின் அதிதேவதை             : கிருஷ்ணன்
3. அதிதேவதையின் நிறம்                          : நீலம்       
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : சிவந்த முகம், சிவந்த கண்கள்,  
                                                                         வேப்பமரத்தடியில் இருப்பவர். 
5. பிங்கள ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       பொன்னிறமான கண்கள், இகழத்தக்க செயல்புரிபவன், நிலையற்ற புகழ் பெற்றவன், கொடையாளி, மேன்மை பெற்றவன், பிறருக்கு தீங்கு செய்பவன், கொடூரமான சொற்களை உடையவன்.



52.  காளயுக்தி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து இரண்டாவது ஆண்டாகும்.
2. காளயுக்தி ஆண்டின் அதிதேவதை         : கல்கி
3. அதிதேவதையின் நிறம்                          : வெண்மை        
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : சிவந்த முகம், சிவந்த கண்கள்,  
                                                                         வேப்பமரத்தடியில் இருப்பவர். 
5. காளயுக்தி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       வளவளவெனப் பேசுபவன், அன்பான தன்மையுடையவன், கொண்டாடத்தக்க அறிவாளி, தெய்வபலமற்றவன், புலவர்களைப் பற்றி  பேசுபவன், கருத்த மற்றும் இளைத்த மேனி உடையவன்.




53.  ஸித்தார்த்தி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து மூன்றாவது ஆண்டாகும்.
2. ஸித்தார்த்தி ஆண்டின் அதிதேவதை     : புத்தர்
3. அதிதேவதையின் நிறம்                          : வெண்மை கலந்த சிவப்பு        
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : பிரமச்சாரி, நீர் நிலையில் தவம்,  
                                                                         கடற்கரையில் வசிப்பவர்,  
                                                                         மேற்குத் திசையில் நின்று 
                                                                         சூரியனை வணங்குபவர்.
5. ஸித்தார்த்தி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       நல்மனம் படைத்தவன், உயிர்களிடத்து கருணை கொண்டவன், வாரி வழங்குபவன், போரில் வெற்றியால் புகழ் பெறுபவன், சுகவாசி, அரசனுக்கு மந்திரியாவான், வெகுமதியாக செல்வம் பெறுபவன்.




54.  ரௌத்திரி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து நான்காவது ஆண்டாகும்.
2. ரௌத்திரி ஆண்டின் அதிதேவதை         : துர்க்கை
3. அதிதேவதையின் நிறம்                          : நீலம்       
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : அரசனாகச் சிம்மாசனத்தில்  
                                                                         வீற்றிருப்பவர், பிறர் அறியாமல்  
                                                                         கேடு செய்பவர், சூதாடி, சிவந்த 
                                                                         கண்கள், பருத்த உடல்.
5. ரௌத்திரி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       பிறருக்கு அச்சத்தை தோற்றுவிப்பவன், பசுக்களைக் காப்பவன், தெளிந்த மனம் கொண்டவன், சபல புத்தி உடையவன், அதிக துஷ்டத்தன்மை கொண்டவன், கெட்ட பெயரெடுத்தவன், மிகக் கொடியவனுமாவான்.




55.  துர்மதி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்தைந்தாவது ஆண்டாகும்.
2. துர்மதி ஆண்டின் அதிதேவதை              : யாதுதானன்
3. அதிதேவதையின் நிறம்                          : நீலம்       
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : பருத்த மேனி, குதிரை மீது  
                                                                         அமர்ந்தவர், கத்தி கேடயத்துடன்       
                                                                         கூடியவர்.
5. துர்மதி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
        சொன்ன  சொல்  காக்க முயல்பவன்,   அல்பத்தனம் நிறைந்தவன், காமம் மிகுந்தவன், தன புத்தியை எப்பொழுதும் பிறரைக் கெடுப்பதிலேயே செலுத்துபவன்.




56.  துந்துபி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து ஆறாவது ஆண்டாகும்.
2. துந்துபி ஆண்டின் அதிதேவதை             : பைரவர்
3. அதிதேவதையின் நிறம்                          : நீலம்       
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : புஷ்கரத்வீபத்தில்  
                                                                         ஆலமரத்தடியில் அமர்ந்தவர், 
                                                                         மஹாவிஷ்ணுவை தியானம் 
                                                                         செய்பவர்.  
5. துந்துபி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       எப்பொழுதும் மன்னர்கள் ஆதரவையும், மதிப்பையும் பெற்றவன், யானை, குதிரைகள், பூமி, பொன் முதலிய செல்வங்களுடன் கூடியவன், நாட்டியம், பாடல்களில் அதிக ஈடுபாடு கொண்டவன்.




57.  ருத்ரோத்காரி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து ஏழாவது ஆண்டாகும்.
2. ருத்ரோத்காரி ஆண்டின் அதிதேவதை   : அநுமன்
3. அதிதேவதையின் நிறம்                          : பொன்னிறம்        
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : தாமரை நிறைந்த குளக்கரையில்  
                                                                         உறைபவர், பரமேஸ்வரனை  
                                                                         தும்பைப் பூவால் பூசிப்பவர். 
5. ருத்ரோத்காரி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       சிவந்த கண்களையுடையவன், அதிக காமத்தின் வயப்பட்டவன், மெலிந்த உடலமைப்பை உடையவன், தன்மானம் மிக்கவன், மோசமான நகங்கள் உள்ளவன், ஆயுதத்தால் தாக்கப்பட்டு வேதனை அடைபவன்.




58.  ரக்தாக்ஷி ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து எட்டாவது ஆண்டாகும்.
2. ரக்தாக்ஷி ஆண்டின் அதிதேவதை          : சரஸ்வதி
3. அதிதேவதையின் நிறம்                          : வெண்மை        
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : பொன் மாளிகையில் உறைபவர், 
                                                                         சிறந்த ஆடை அணிகலன்களை  
                                                                         அணிந்தவர், பல பெண்களுடன் 
                                                                         கூடியவராகக் காணப்படுபவர். 
5. ரக்தாக்ஷி ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       ஆசாரம் மற்றும் தர்மத்தில் அதிகமாக ஈடுபாடு உள்ளவன், மன்மதனை விஞ்சிய அழகு உடையவன், பிறரின் ஆதிக்கத்தை விரும்பாதவன், கண் நோய் உள்ளவன்.




59.  குரோதன ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது ஐம்பத்து ஒன்பதாவது ஆண்டாகும்.
2. குரோதன ஆண்டின் அதிதேவதை         : தாக்ஷாயணி
3. அதிதேவதையின் நிறம்                          : பொன்னிறம்        
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : கோணலான சரீரம், விகாரமான  
                                                                         முகம், பல பக்கங்களிலும் 
                                                                         பார்வை, கோப குணம், 
                                                                         மரத்தடியில் நாய்களுடன் 
                                                                         விளையாடுபவர்.
5. குரோதன ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       மற்றவர் செயலுக்கு தடை போடுபவன், தாமத குணம் உள்ளவன், பிறருக்கு பயங்கரமானவன், பிறர் மனதையும், புத்தியையும் கெடுப்பவன்.




60.  (அ)க்ஷய ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது அறுபதாவது ஆண்டாகும்.
2. (அ)க்ஷய ஆண்டின் அதிதேவதை          : லக்ஷ்மி
3. அதிதேவதையின் நிறம்                          : பொன்னிறம்       
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்         : நீண்ட கேசங்கள், நெடிய  
                                                                         கருத்தமேனி, கொடூர குணம்.
5. (அ)க்ஷய ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
       தேடி வைக்கின்ற பொருளைச் செலவிடுபவன், பிறர் செயல்களில் குற்றம் காண்பவன், நற்செயல்களில் அதிக ஈடுபாடற்றவன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக