ஞாயிறு, 21 ஜூலை, 2013

THIRUMANTIRAM - 82 : திருவடியின் கீழ் இருந்தேன்!


82.                        ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு          
                             ஊனமி ல்ஒன்பது கோடி யுகந்தனுள்    
                             ஞானப்பா லாட்டி நாதனை யர்ச்சித்து    
                             நானு மிருந்தேன்நற் போதியின் கீழே.   

     ஞானத் தலைவியாய் உள்ள சத்தியுடன் விளங்கும் சிவநகர் புகுந்து ஊனம் ஒன்றில்லாத ஒன்பது முடிவுடன் ஆன சந்திப்பில் தோத்திரமான திருமுழுக் காட்டைச் செய்து, இறைவனை வணங்கி நான் நல்ல அறிவு மயமாய் விளங்கும் திருவடியின் கீழ் இருந்தேன்.
   
     விளக்கம் : ஒன்பது கோடியுகம் - எழுவகைப்பட்ட ஆதாரத்துடன் விந்து நாதம் கூட ஒன்பது முடிவு; ஒன்பது கோடி ஊழிகள். உடம்பான கண்டத்தை நீங்கிச் சிவமாகிய அகண்டத்தில் திருமூலர் பொருந்தியிருந்தார். ஞானப் பாலாட்டுதல் - தோத்திரம் செய்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக