ஞாயிறு, 21 அக்டோபர், 2012

THIRUMANTIRAM - 39 ஈசன் அருள் பெறலாம்.


39.                        வாழ்த்தவல் லார்மனத்துள்உறு சோதியை,   
                             தீர்த்தனை அங்கேதிளைக்கின்ற தேவனை  
                             ஏத்தியும் எம்பெருமான் என்று இறைஞ்சியும் 
                             ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே.

     இறைவன் தன்னைத் திருவைந்தெழுத்தால் வணங்க வல்லவரின் திருவுள்ளத்தில் மிக்க அறிவுப் பேரொளியாய்த் தோன்றுவான். அவன் இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன். அத்தகைய தீர்த்தனை, மேலும் செவ்வியுடைய உயிர்களிடத்து மகிழ்ந்து திளைக்கும் தெய்வத்தைப் பல வகையாய்த் துதித்தும், எம் தலைவனே என்று வணங்கியும், அவனுக்கு முற்றும் உரிமையாய்த் தன்னை அறக் கொடுத்தவன் நண்பன் என்று சொல்லப்படுபவன். அந்த நிலை எய்தினால் அவன் திருவருள் பெறுவது எளியதாகும்.

கண்ணப்ப நாயனார் சிவனின் பக்தர் 

சுந்தரமூர்த்தி நாயனார் சிவனின் தோழர் 

     விளக்கம் :  ஆத்தம் செய்தல்  - நண்பன் ஆதல். ஈசன் - ஆண்டவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக