வெள்ளி, 12 அக்டோபர், 2012

THIRUMANTIRAM - 35 ஈசான முகம் விளங்கும்.


35.                        ஆற்றுகில் லாவழி யாகு மிறைவனைப்  
                             போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்  
                             மேற்றிசைக் குங்கிழக் குத்திசை யெட்டோடு 
                             மாற்றுவ னப்படி ஆட்டவுமாமே.


     பிறர் படைக்காத செந்நெறியில் விளங்குபவன் சிவன். அப்பெருமானைப் போற்றுங்கள். புகழுங்கள். அவ்வாறு புகழ்ந்தால் ஈசான திக்குக்கும் சிரசில் கிழக்கு முதலாக அட்டதள கமலத்தை நிமிரும்படி செய்வான். அங்ஙனம் உங்களது ஈசான முகம் விளங்கவும் ஆகும்.



     விளக்கம் :  மேல்திசை - உச்சி; இங்கு விளங்குவது ஈசான முகம். மாற்று தலாவது - சிரசில் கவிழ்ந்த அட்டதள கமலத்தை நிமிரும்படி செய்தல். ஆற்றுவன் - சன்மார்க்க நெறியில் செல்லச் செய்பவன். அட்டதள கமலம் கவிழ்ந்த நிலையில் இருந்தால் சீவரது எண்ணம் கீழ் முகமாக விளங்கும். அதாவது உலக முகமாய் விளங்கும். இக்கமலமானது நிமிர்ந்த போது அவரது எண்ணம் மேல் முகமாக ஆகும். அவரது ஊர்த்துவ முகமாகிய ஈசானன் ஒளிமயமாக விளங்கும்.   
Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக