வெள்ளி, 19 அக்டோபர், 2012

THIRUMANTIRAM - 36 அருள் பெறலாம்.


36.                        அப்பனை நந்தியை ஆரா அமுதனை   
                             ஒப்புஇலி வள்ளலை ஊழி முதல்வனை   
                             எப்பரிசு ஆயினும் ஏத்துமின்; ஏத்தினால்  
                             அப்பரிசு ஈசன் அருள்பெற லாமே. 


     உயிர்கள் அனைவர்க்கும் தந்தையை, இறைவனை, தெவிட்டாத அமுதம் போன்றவனை, தனக்கு ஒப்பில்லாதவனை, வேண்டியார்க்கு வேண்டியவற்றை அளிக்கும் வள்ளலை, ஊழியைச் செய்கின்ற முதல்வனை எவ்வகையிலேனும் வழிபடுங்கள். அவ்வகையில் அவன் அருளைப் பெறலாம்.


     விளக்கம் : ஆராஅமுது - தெவிட்டாத அமிழ்தம். ஒப்பிலி - தனக்கு ஓர் உவமை இல்லாதவன். ஊழி முதல்வன் - ஊழியை ஏற்படுத்தும் இறைவன். எப்பரிவு - எவ்வகை; எத்தன்மை. ஏத்துமின் - துதியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக