செவ்வாய், 4 செப்டம்பர், 2012

Minor Girl வாலிபருடன் செக்ஸ் - மைனர் பெண்ணுக்கு 100 கசையடி.


     மாலத்தீவில் வாலிபருடன் செக்ஸ் வைத்துக் கொண்ட 16 வயது மைனர் பெண்ணுக்கு 100 கசையடி வழங்கவும் 8 மாதம் வீட்டு காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     மாலத்தீவின் தலைநகர் மாலேவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள ரா அடோல் என்ற பகுதியில் 16 வயது பெண்ணும் 29 வயது வாலிபரும் உறவு வைத்துக் கொண்டனர். இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர், போலீசில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 


     இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது, செக்ஸ் வைத்துக் கொண்டதை பெண் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்து கொண்ட குற்றத்துக்காக சிறுமிக்கு 100 கசையடி வழங்கவும், 8 மாதம் வீட்டுக் காவலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

     மேலும், மைனர் பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்ட வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 16 வயதாவதால், அவளுக்கு 18 வயதானவுடன் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


     இதற்கிடையில், பொது இடத்தில் பெண்களுக்கு கசையடி கொடுக்கும் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று ஐ. நா. மனித உரிமைகள் தலைவர் நவிபிள்ளை, மாலத்தீவு அரசை வலியுறுத்தி வருகிறார். 

     மாலத்தீவில் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கசையடி வழங்க கிராமத் தலைவர்களே உத்தரவிடுவது வழக்கம். அவர்களே நீதிபதிகள் போல செயல்படுகின்றனர். பொதுமக்கள் முன்னிலையில் மூங்கில் பிரம்பால் அடித்து குற்றம் நிறைவேற்றப்படுகிறது. இதற்கு பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக