திங்கள், 18 ஜூன், 2012

ஈசனுடன் கொள்ளும் தொடர்புக்கு ஒப்பில்லை!

17.                       காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும் 
                            மாயம் கத்தூரிஅது மிகும்; அவ்வழி 
                            தேசம் கலந்து ஒரு தேவன என்று எண்ணினும் 
                            ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே.
     
     பருமை நுண்மை ஆகிய உடம்புகள் இரண்டும் ஒன்றாய்க் கலந்து இருப்பினும், மாயையின் தொடர்புடைய நுண்ணிய உடம்பில்தான் கானமானது மிகுந்திருக்கும். அக்கானம் வழியே மனம் பொருந்தி, ஆன்மா தன்னை ஒளிவடிவமாய்க் காணினும், உடலை விட்டு வான் வடிவினனாகிய சிவனுடன் கொள்ளும் தொடர்புக்கு ஒப்பில்லை.

     விளக்கம் : காயம் - உடம்பு. அது பருமை, நுண்மை என்ற இரண்டு வகைப்படும். கொதிக்கினும் - கலந்து இருப்பினும். மாயம் - மாயை. கத்தூரி - கானம். தேசு - ஒளி. எதிர் இல்லை - ஒப்பு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக