சனி, 16 ஜூன், 2012

உள்ளவனும் இல்லவனும் ஆவான்!


13.                     மண்அளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
                          எண்அளந்து இன்னம் நினைக்கிலார் ஈசனை;
                          விண்அளந் தான்தன்னை மேல்அளந்தார் இல்லை;
                          கண்அளந்து எங்கும் கடந்து நின்றானே.     

     மண் உலகத்தை அளந்த திருமால், அவனது கொப்பூழில் தோன்றிய நான்முகன் முதலிய தேவர்களும் சிவனை எண்ணத்தில் நிறுத்தி நினையாதிருக்கின்றனர். வானத்தில் விரிந்து விளங்கும் பெருமானை மண்ணவர் கடந்துபோய் அறிய முடியவில்லை. ஆகவே அப்பெருமான் மண்ணில் கலந்தும் எல்லாவற்றையும் கடந்தும் விளங்குகின்றான்.

     விளக்கம் : தேவர்கள் சிவபெருமானை நினைக்கின்றிலர். இதற்குக் காரணம் அவர்கள் இன்பத்தில் திளைப்பது! எண் - அறிதல். விண் - அண்டம். கண் அளத்தல் - கண்ணுடன் கலந்து நிற்றல். கண், இடம், இடத்துள்ள பொருள் ஆகியவற்றையும் குறிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக