திங்கள், 18 ஜூன், 2012

வரம் தருவான் வள்ளல்!


18.                         அதிபதி செய்து அளகை வேந்தனை 
                              நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி 
                              அதுபதி ஆதரித் தாக்கம்அது ஆக்கின்  
                              "இதுபதி கொள்" என்ற எம் பெருமானே.     



     வடக்குத் திக்குக்குத் தலைவனாய்ச் செய்து அளகாபுரி மன்னனான குபேரனைச் செல்வத்துக்குத் தலைவனாகச் செய்த நிறைந்த தவத்தின் பயனைக் கருத்தில் கொண்டு, அவ்வட திசையைப் போற்றி நீயும் சேமிப்பைப் பெருக்கினால் இவ்வட திக்கிற்குத் தலைவனாய் நீயும் ஆகலாம் எனச் சொல்பவன் எம் தலைவன் ஆவான்.

     விளக்கம் : அதிபதி - தலைவன். அளகை - அளகாபுரி; குபேரனின் நகர். நிறைதவம் - விந்துவை ஒளிமயமாக்கும் யோகம். அதிபதி - வடக்குத் திக்கு. ஆக்கம் - சேமிப்பு; உயிர்ச்சத்தி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக