சனி, 16 ஜூன், 2012

அவனே தலைவன்!

12.                        கண்ணுத லான் ஒரு காதலின் நிற்கவும்
                             என்இழி தேவர் இறந்தார் எனப் பலர்;
                             மனஉறு வார்களும் வான்உறு வார்களும்
                             அண்ணல் இவன்என்று அறியகிலார்களே.    

     நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமான் நிகர் இல்லாத அன்புடன் அழியாதிருக்கவும் எண்ணில்லாத தேவர்கள் இறந்தனர். மண்ணுலகத்திலும், விண்ணுலகத்திலும் வாழ்கின்ற பலரும் இப்பெருமானே அழியாதிருக்க அருள் செய்பவன் என்று அறியாதிருக்கின்றனர்! என்னே அவர்தம் அறியாமை!
     
     விளக்கம் : கண்ணுதலோன் - நெற்றியில் கண் உடையவனான சிவபெருமான். அக்கண் தீமயமானது. எண்ணிலி - எண்ணில்லாதவர். மண் உறுவார் - மண் உலகத்தவர். வான் உறுவார் - தேவ உலகில் வாழ்பவர். அண்ணல - பெருமையுடையவர். அறியகில்லார் - அறியமாட்டாதவர்.



சிவபெருமானின் ஆற்றலை உலகத்தவரும் தேவரும் அறியவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக