சனி, 16 ஜூன், 2012

அவன் பெயர் நந்தி.

11.                       அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில் 
                            இயலும் பெருந்தெய்வம் யாதும்ஒன்று இல்லை;
                            முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே 
                            பெயலும் மழைமுகில்; பேர் நந்தி தானே.
     
     தொலைவிலும் பக்கத்திலும் எமக்கு முன்னவனான இறைவனின் பெருமையை நினைக்கின் அவருக்கு ஒப்பான தெய்வம் வேறொன்றில்லை. முயற்சியும் அதன் பயனும் மழை பெய்கின்ற மேகமும் அப்பெருமானே ஆகும். அவனது பெயர் நந்தியாகும்.

விளக்கம் : சிவபெருமானே உயிர்களுக்கு அருள் செய்பவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக