புதன், 23 மே, 2012

சமூகம் மற்றும் அரசியல்


     இன்று நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற விவாதம் அரசியல் கட்சிகளிடையே மௌனமாக திரைமறைவில் நடைபெற்றுகொன்று இருக்கிறது. எந்த கட்சி யாரை தேர்ந்து எடுக்கும் என்று யாருக்குமே தெரியாது.
     இந்த சமயத்தில் தமிழ் நாட்டின் முதல்வர் முன்னாள் சபாநாயகர் பி. ஏ. சங்மா அவர்களை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.பல செய்தி பத்திரிக்கைகளைப் படித்துப் பார்த்ததில் இவரே மிகப் பொருத்தமானவராக தெரிகிறார். ஆனால் காங்கிரஸ் இவரை ஆதரிக்காது. பி ஜே பி கட்சிக்கும் அவ்வளவு விருப்பம் இல்லை என்று கட்சித்தலைவர்களின் மௌனத்தை வைத்தே கூறிவிடலாம். 
     எது எப்படியோ பிரணாப் முகர்ஜியா, சங்மாவா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். 
     இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை உயர்த்தப் படப்போகின்றது. இதனால் அனைத்துப் பொருள்கள் விலையும் கூடப் போகின்றது. இதற்குமேல் என்ன வந்துவிடும். மக்கள்தான் விலையேற்றத்துக்கு பழகிவிட்டார்கள். நம் ஆட்சியாளர்கள் எடுத்த முடிவை யார் மாற்றமுடியும்.இதற்கு முடிவை மக்கள்தான் சொல்லவேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக