வியாழன், 29 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 67 குரு பாரம்பரியம் - நந்தி அருள் பெற்ற எண்மர்.


67.                        நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் 
                             நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி 
                             மன்று தொழுத பதஞ்சலி, வியாக்கிரமர் 
                             என்ற இவர், என்னுடன் எண்மரும் ஆமே.

Vaikuntha Dwaram : வைகுண்டம் கிடைக்கும்!



     ராமானுஜரின் வரலாற்றோடு தொடர்புடையவர் திருக்கச்சி நம்பிகள். கஜேந்திர தாசர் என்பது அவருடைய இயற்பெயர். பூவிருந்தவல்லியைச் சேர்ந்த வைசியர் குலத்தவரான கஜேந்திரதாசர், ஸ்ரீபெரும்புதூர் வேதியரான கேசவ சோமயாஜியுடன் (ராமானுஜரின் தந்தை) தோழமை கொண்டிருந்தார். 

புதன், 28 நவம்பர், 2012

Navabashana Navagrahas : தோஷங்கள் போக்கும் நவபாஷான கடற்கரை!


     இலங்கை சென்று ராவணனை வதம் செய்து சீதையுடன் திரும்பிய ராமன் இங்குள்ள கடற்கரை ஓரம் அமர்ந்து சிவனை வழிபட நினைத்தார். லிங்கம் எடுத்துவரச் சென்ற ஹனுமான் வர தாமதம் ஆனதால், சீதை கடற்கரை மண்ணிலே பிடித்த லிங்கத்தை ராமர் வழிபட்டார்.

LADIES HOSTEL : லேடீஸ் ஹாஸ்டல் - மகளிர் மட்டும்.


     கல்லூரிகள் திறக்கும் நேரம் இது. புதிய கல்லூரியில் காலடி வைக்கும் பெண்கள் தங்கள் கல்லூரியில் இருக்கும் விடுதிகளில் தங்கி படிப்பார்கள். சிலர் தனியார் பெண்கள் விடுதியில் தங்குவார்கள். படிக்கும் பெண்கள் மட்டுமல்ல, பணிக்கு செல்லும் பெண்களும் சென்னைக்கு வந்தால் தனியார் விடுதிகளில் தங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

செவ்வாய், 27 நவம்பர், 2012

Walking Techniques : நடந்தால் மூட்டுத் தேயுமா?


     ‘அதிகம் நடந்தால் மூட்டுத் தேய்ந்துவிடும்’ என்கிறார்களே, உண்மைதானா? பதில் சொல்கிறார் பிஸியோதெரபி டாக்டர் ரம்யா.

Torture for 13 year girl : சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!



     தளசேரி : கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருத்தி அவளது தந்தை, சகோதரன் மற்றும் மாமா ஆகியோரால் 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்கார கொடுமைக்கு ஆளான செயல் அம்மாநிலத்தை பதை பதைக்க வைத்துள்ளது.

திங்கள், 26 நவம்பர், 2012

SMS : தொல்லை எஸ்.எம்.எஸ். - இல்லை இனிமேல்!



     கொசுபோல் கும்பல் கும்பலாய் வந்து தொல்லை தந்த விளம்பர எஸ்.எம்.எஸ்.களுக்கு மூக்கணாங்கயிறு மாட்டியுள்ளது ட்ராய். விளம்பரக் குறுஞ்செய்திகளால் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் செல்பேசிப் பயனர்களுக்கு இனிப்பான செய்தி.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

ASTROLOGY - 36 : ஜோதிடம் - ஆண்டுகள் - ஸ்வரூபம்.


1.  பிரபவ ஸம்வத்ஸரத்தின் ஸ்வரூபம்  :

1. அறுபது ஆண்டுகளில் இது முதலாவது ஆண்டாகும்.
2. பிரபவ ஆண்டின் அதிதேவதை         : பிரம்மா.  
3. அதிதேவதையின் நிறம்                     : தாமரை மலரின் நிறம்.
4. ஆண்டுத் தேவதையின் தோற்றம்    : பருத்த உடலமைப்பு, சிவந்த கண்கள் 
5. ஆண்டுத்தேவதையின் அணிகலன்கள் : விபூதி, ஜபமாலை அணிந்தவர்.
6. பிரபவ ஆண்டில் பிறந்தவர்களின் பலன் :
     எல்லாப் பொருள்களையும் சம்பாதித்துச் சேர்ப்பதில் ஆசை கொண்டவன். குழந்தை பாக்கியமுடையவன். அறிவாளி. நீண்ட ஆயுள் கொண்டவன். எல்லா போகங்களையும் துய்ப்பவன்.

THIRUMANTIRAM - 66 சிவனை ஆகம அறிவால் அறிய இயலாது.


66.                        அவிழ்க்கின்றவாறும், அதுகட்டு மாறும்  
                             சிமிட்டலைப் பட்டுஉயிர் போகின்ற வாறும்  
                             தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் இரண்டும் 
                             உணர்த்தும் அவனை உணரலும் ஆமே.

சனி, 24 நவம்பர், 2012

ASTROLOGY - 35 : ஜோதிடம் - ஆண்டுகள்.


இந்திய ஆண்டுகளுக்கு இணையான ஆங்கில ஆண்டுகள்.

வ. எண்.  ஆண்டின் பெயர்.        1           2           3         அபிமான தேவதை.

    1.          பிரபவ                       1867      1927      1987         பிரம்மா    

    2.          விபவ                        1868      1928      1988         விஷ்ணு  
         
    3.          சுக்கில                       1869      1929      1989         மகேசன்

THIRUMANTIRAM - 65 ஊழிக்காலத்தில் அருளினான்.


65.                        மாரியும் கோடையும் வார்பனி தூங்க, நின்று 
                             ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து 
                             ஆரியமும் தமிழும் உடனே சொலிக் 
                             காரிகை யார்க்குக் கருணை செய்தானே.

ASTROLOGY - 34 : ஜோதிடம் - இராசிகள்.


மீன ராசி 

     இராசி மண்டலத்தில் இது பன்னிரெண்டாவது இராசியாகும். இது காண்பதற்கு இரு மீன்கள் ஒன்றின் வாலை மற்றொன்று பற்றிக்கொண்டு இருப்பது போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் மீன ராசி எனும் பெயரிட்டனர்.

ASTROLOGY - 33 : ஜோதிடம் - இராசிகள்.


கும்ப ராசி 

     இராசி மண்டலத்தில் இது பதினொன்றாவது இராசியாகும். இது காண்பதற்கு குடத்துடன் கூடிய மனிதனைப் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் கும்ப ராசி எனும் பெயரிட்டனர்.

THIRUMANTIRAM - 64 பயனற்றவை.


64.                        அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் 
                             எண்இலி கோடி தொகுத்திடும் ஆயினும் 
                             அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்  
                             எண்இலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

வெள்ளி, 23 நவம்பர், 2012

ASTROLOGY - 32 : ஜோதிடம் - இராசிகள்.


மகர ராசி 

     இராசி மண்டலத்தில் இது பத்தாவது இராசியாகும். இது காண்பதற்கு சுறா மீன் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் மகர ராசி எனும் பெயரிட்டனர்.

THIRUMANTIRAM - 63 ஒன்பது ஆகமங்களின் பெயர்கள்.


63.                        பெற்றநல் லாகமம் காரணம் காமிகம்   
                             உற்றநல் வீர முயர்சிந்திய வாதுளம்   
                             மற்றவ்வி யாமள மாகுங்கா லோத்தரம்   
                             துற்றநற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே.

Rajapalayam Ramasubramania Raja : தாகம் தீர்க்கும் தயாள மனிதர்!


     ராஜபாளையம், மண் எப்படியோ அதே போல மக்களின் மனதும் அப்படியே காட்டை திருத்தி நாடாக்கியவர்கள் நிறைந்த மண், தென்மாவட்டங்களிலேயே தொழில்வளம் நிறைந்த வளமையான பூமி.

I will go to Prison : நான் ஜெயிலுக்குப போறேன்!


       மனைவியின் நச்சரிப்பு தாங்காமல், சிறைக்கு செல்ல முயன்று, ஓட்டல் உரிமையாளர் ஒருவர், கொள்ளையடிப்பு நாடகத்தை நடத்தியுள்ளார். தைவான் நாட்டை சேர்ந்தவர் பய், 36. இவரது மனைவி, தினமும் இவரை திட்டிக்கொண்டே இருந்ததால், மனம் வெறுத்து போன பய், சிறைக்கு சென்று நிம்மதியாக இருக்க திட்டமிட்டார்.

வியாழன், 22 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 62 பரசிவத்திடமிருந்து பெற்றவை.


62.                        சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம் 
                             உவமா மகேசர் உருத்திர தேவர் 
                             தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற  
                             நவஆ கமம் எங்கள் நந்தி பெற்றானே.

புதன், 21 நவம்பர், 2012

ASTROLOGY - 31 : ஜோதிடம் - இராசிகள்.


தனுர் ராசி 

     இராசி மண்டலத்தில் இது ஒன்பதாவது இராசியாகும். இது காண்பதற்கு வில்லைப் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும்  தனுசு ராசி  எனும் பெயரிட்டனர்.

THIRUMANTIRAM - 61 அறிவாய் விளங்குபவன்.


61.                        பரனாய்ப் பராபரம் காட்டி உலகில் 
                             தரனாய்ச் சிவதன்மம் தானேசொல் காலத்து     
                             அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி 
                             உரன்ஆகி ஆகமம் ஓங்கிநின் றானே.

செவ்வாய், 20 நவம்பர், 2012

ASTROLOGY - 30 : ஜோதிடம் - இராசிகள்.


விருச்சிகம் ராசி 

     இராசி மண்டலத்தில் இது எட்டாவது இராசியாகும். இது காண்பதற்கு தேள் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும்  விருச்சிகம் ராசி  எனும் பெயரிட்டனர்.

THIRUMANTIRAM - 60 நீர்மேல் எழுத்தாகும்.


60.                        அண்ண லருளா லருளுந்திவ் யாகமம் 
                             விண்ணி லமரர் தமக்கும் விளங்கரிது   
                             எண்ணி லெழுபது கோடிநூறாயிரம்  
                             எண்ணிலும் நீர்மே லெழுத்தது வாகுமே.

திங்கள், 19 நவம்பர், 2012

NATURE FOOD IS UNEQUAL : ஈடில்லா இயற்கை உணவு!



     விடிந்தும், விடியாத அந்த அதிகாலை வேளையிலே ஒரு சின்னஞ்சிறிய கடைமுன் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டத்திற்கு காரணம் அங்கு வழங்கப்படும் இயற்கை உணவுகள்தான்.

ASTROLOGY - 29 : ஜோதிடம் - இராசிகள்.


துலா ராசி 

     இராசி மண்டலத்தில் இது ஏழாவது இராசியாகும். இது காண்பதற்கு தராசைக்கையில் கொண்டுள்ள ஒரு மனிதனைப் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் துலா ராசி எனும் பெயரிட்டனர்.

THIRUMANTIRAM - 59 சிவபெருமான் வெளிப்படுத்தியவை அறத்தை உரைப்பன.


59.                        பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும் 
                             கண்டவர் கூறும் கருத்தறி வாரென்க    
                             பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் 
                             அண்ட முதலா நரஞ்சொன்ன வாறே.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

ASTROLOGY - 28 : ஜோதிடம் - இராசிகள்.


கன்னி ராசி 

     இராசி மண்டலத்தில் இது ஆறாவது இராசியாகும். இது காண்பதற்கு குடத்தைச் சுமந்து நிற்கும் ஒரு பெண்ணைப் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் கன்னி ராசி எனும் பெயரிட்டனர்.

THIRUMANTIRAM - 58 ஆகமத்தின் வழி.


58.                        அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் 
                             எண்ணில், இருபத்தெண் கோடி நூறாயிரம்  
                             விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்;
                             எண்ணிநின்று அப்பொருள் ஏத்துவன் நானே.

THIRUMANTIRAM - 57 ஆகமச்சிறப்பு : ஆகமங்களை அருளியவன்.


 57.                        அஞ்சன மேனி அரிவைஓர் பாகத்தன் 
                             அஞ்சொடு இருபத்து மூன்றுஉள ஆகமம்;
                             அஞ்சலி கூப்பி அருபத் தறுவரும் 
                             அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

Meals for Only One Rupee : நம்பமுடியுமா? ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு!


     மதிய உணவு வேளை ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏ. எம். வி. உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள்.

THIRUMANTIRAM - 56 புறத்தே போய் அழிவர்!


56.                        பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் 
                             ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார் 
                             வேட்டு விருப்பார், விரதம் இல்லாதவர்  
                             ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே.

சனி, 17 நவம்பர், 2012

தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்!


     கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களை தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து அத்துமீறலில் ஈடுபடுவதாக தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொண்டுள்ளார்.

ASTROLOGY - 27 : ஜோதிடம் - இராசிகள்.


சிம்ம ராசி

     இராசி மண்டலத்தில் இது ஐந்தாவது இராசியாகும். இது காண்பதற்கு சிங்கம் போல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் சிம்ம ராசி  எனும் பெயரிட்டனர்.

GUAVA : கொய்யாப்பழம்!


     பழங்களில், மூக்கை துளைக்கும் வாசனை கொண்டதோடு மட்டுமல்லாமல், மிகச்சிறந்த மருத்துவ குணம் உள்ள பழமாகவும் விளங்குகிறது கொய்யா.

THIRUMANTIRAM - 55 சிவனை உணர்வார் இலர்!


55.                        ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக் 
                             கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை,
                             வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் 
                             பேரு அங்கம் ஆகப் பெருக்குகின் றாரே.

வெள்ளி, 16 நவம்பர், 2012

ASTROLOGY - 26 : ஜோதிடம் - இராசிகள்.


கடக ராசி (கர்கடகம்)

     இராசி மண்டலத்தில் இது நான்காவது இராசியாகும். இது காண்பதற்கு நண்டுபோல் காட்சி தரும். எனவே இப்பொருள் தரும் 'கர்கடகம்' எனும் பெயரிட்டனர்.

THIRUMANTIRAM - 54 உபநிடதம் கூறும் நெறி.


54.                        திருநெறி ஆவது, சித்து அசித்து அன்றிப்  
                             பெருநெறி ஆய பிரானை நினைந்து 
                             குருநெறியாம் சிவ மரம்நெறி கூடும்    
                             ஒருநெறி; ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

KING FISH : ராஜா மீன்


     கனவாய் எனப்படும் மீன் இனத்துக்கு மூன்று இதயங்கள் உள்ளன. இந்த மீன், ஸ்குவிட் மற்றும் ஆக்டோபஸ் குடும்பத்தை சார்ந்தது. இதை, 'செப்பலோபாட்ஸ்' எனவும் அழைக்கின்றனர்.

வியாழன், 15 நவம்பர், 2012

ASTROLOGY - 25 : ஜோதிடம் - இராசிகள்.


மிதுன ராசி :

     இராசி மண்டலத்தில் இது மூன்றாவது இராசியாகும். இது காண்பதற்கு  ஆண், பெண் என இருவர் சேர்ந்து இருப்பது போல் காட்சியளிப்பதால் இதை இரட்டையர் எனும் பொருள் தரும்  'மிதுனம்' எனும் பெயர் பெற்றது. 

THIRUMANTIRAM - 53 நுண்ணிய நிலையினன் சிவபெருமான்.


53.                        இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே 
                             உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி,
                             வெருக்கு உரு வாகிய வேதியர் சொல்லும்  
                             கருக் குரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

புதன், 14 நவம்பர், 2012

ASTROLOGY - 24 : ஜோதிடம் - இராசிகள்.


ரிஷப ராசி :

     இராசி மண்டலத்தில் இது இரண்டாவது இராசியாகும். இது காண்பதற்கு காளை போன்ற தோற்றமளிப்பதால் இது காளை என்னும் பொருள் தரும் 'ரிஷபம்' எனும் பெயர் பெற்றது. 

THIRUMANTIRAM - 52 வேதத்தை உரைத்த காரணம்!


52.                        வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் 
                             வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட 
                             வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் 
                             வேதம் உரைத்தானும் மெய்பொருள் காட்டவே.

செவ்வாய், 13 நவம்பர், 2012

ASTROLOGY - 23 : ஜோதிடம் - இராசிகள்.


இராசிகள் :

     சோதிடவியலில் கோள்கள், நாள்களுக்கு அடுத்தாற்போல் முக்கியத்துவம் வாய்ந்தவை இராசிகளாகும். வானமண்டலம் 360 பாகைகள் கொண்ட ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது. இதனை 12 இராசிகளாகப் பிரிக்க ஒவ்வொரு இராசியும் 30 பாகைகள் கொண்டதாக ஆகிறது. 

THIRUMANTIRAM - 51 வேதத்தை ஓதி வீடு பெற்றனர்.


51.                        வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின் 
                             ஓதத் தகும்அறம் எல்லாம் உள; தர்க்க 
                             வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற 
                             வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.

Science of Foretelling Events by Stars ஜோதிடம் - 22


சோதிடவியலில் நட்சத்திரம் உத்திரட்டாதியின் தன்மை : 

 1. நட்சத்திரத்தின் பெயர்                          --  உத்திரட்டாதி 

 2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர்     --  உத்ரப்ரோஷ்டபதா  

 3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை              --  இரண்டு 

 4நட்சத்திரத்தின் உருவ அமைப்பு         --  கத்திவடிவம்     

THIRUMANTIRAM - 50 வழிபடுபவர் செய்ய வேண்டியது!


50.                        குடுவன்; நெஞ்சிடை வைப்பன்; பிரான் என்று 
                             பாடுவன்; பன்மலர் தூவிப் பணிந்து நின்று 
                             ஆடுவன்; ஆடி, அமரர் பிரான் என்று 
                             நாடுவன்; நான்இன்று அறிவது தானே.

Banks are Honest? : பொதுத்துறை வங்கிகளில் அரசியலா?


ரூ. 1,23,462,00,00,000

     இந்தியப் பொதுத்துறை வங்கிகள் கொடுத்துத் திரும்ப வராத கடன்களின் மொத்த மதிப்புதான் இது. உண்மையான அதிர்ச்சி இந்தத் தொகையல்ல. இந்தியாவில் இன்றைக்கு யாருடைய கவனத்தையும் இந்தத் தொகை ஈர்க்கவில்லை என்பதுதான்.

THIRUMANTIRAM - 49 முத்தியை அடையலாம்!


49.                        நரை பசு பாசத்து நாதனை உள்ளி,
                             உரைபசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத் 
                             திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக் 
                             கரைபசு பாசம் கடந்து எய்த லாமே.

திங்கள், 12 நவம்பர், 2012

Science of Foretelling Events by Stars ஜோதிடம் - 21


 சோதிடவியலில் நட்சத்திரம் சதயத்தின் தன்மை : 

 1. நட்சத்திரத்தின் பெயர்                          --  சதயம் 

 2. நட்சத்திரத்தின் வடமொழிப் பெயர்     --  சதபிஷக்  

 3. நட்சத்திரத்தின் எண்ணிக்கை              --  நூறு

 4நட்சத்திரத்தின் உருவ அமைப்பு         --  கோளம்    

ஞாயிறு, 11 நவம்பர், 2012

THIRUMANTIRAM - 48 அணையா விளக்கைப் பொருந்தியிருந்தேன்!


48.                        அடியார் பரவும் அமரர் பிரானை 
                             முடியால் வணங்கி முதல்வனை முன்னிப் 
                             படியார் அருளும் பரம்பரன் எந்தை 
                             விடியா விளக்குஎன்று மேவி நின்றேனே.