புதன், 1 ஆகஸ்ட், 2012

சைக்கோவாக அம்மு பாரதி!


     சைக்கோ கேரக்டரில் நடிக்க ஆசையாக இருக்கிறது. அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக நடிப்பேன், என்று நடிகை அம்மு பாரதி கூறியுள்ளார். அம்முவாகிய நான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பாரதி.

     படத்தில் அவரது கேரக்டர் ரசிகர்களால் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மு பாரதி என்று அழைக்கப்பட்டு வரும் பாரதி, திடீரென ரகசிய திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். தற்போது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் ருத்ரம் தொடரில் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்து வரும் அவர், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார்.

     இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், கல்யாணம், குழந்தை என செட்டில் ஆன பிறகு, சீரியல்தானே நமக்கு சரி என நினைத்து சீரியல் பக்கமாக ஒதுங்கி விட்டேன். 

     வழக்கமான அழுகை சென்ட்டிமென்ட், பிளாக்மெயில் இல்லாத சீரியல் இது. இயல்பான காட்சிகள், ஷார்ப் வசனம், மிரட்டல் ட்விஸ்ட் இருந்ததால்தான் நடிக்க சம்மதிச்சேன். 

     சினிமாவிலும் நெகட்டிவ் அல்லது சைக்கோ கேரக்டர் கிடைச்சா சூப்பரா பண்ணுவேன், என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக