வியாழன், 9 ஆகஸ்ட், 2012

கன்னத்தில் முத்தம் இட்டால்!!


     மாதவனை பார்த்ததும் ஓடிவந்து கட்டிப்பிடித்து ரசிகை ஒருவர் முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலைபாயுதே படத்தில் நடித்த பின் லவ்வர் பாய் இமேஜை பெற்றார் மாதவன். தொடர்ந்து சாக்லேட் ஹீரோவாக நடித்து இளம் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வந்தார்.

     இப்போது அவர் 40 வயதை கடந்துவிட்டார். இப்போதும் ஒரு சில ரசிகைகள் அவரை லவ்வர் பாய் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு ரசிகை பொது விழா ஒன்றில் எல்லை மீறிய சம்பவம் திருச்சியில் நடந்திருக்கிறது. 

     திருச்சியில் சமீபத்தில் விழா ஒன்றுக்கு சென்றிருந்தார் மாதவன். கூட்டம் அதிகம் சேர்ந்ததால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தனியார் செக்யூரிட்டிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில், ரசிகை ஒருவர் மாதவனை பார்த்ததும் ஓடிவந்தார். 

     மேடையில் ஏற முயன்ற அவரை போலீசார் தடுக்க வந்தனர். ஆனால் போலீசின் முயற்சி பலிக்கவில்லை. மேடைக்கு வந்த அந்த ரசிகை திடீரென மாதவனை கட்டிப்பிடித்து, கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. 

     மேடையில் இருந்தவர்கள், திறந்த வாயை மூடவில்லை. பின் பாதுகாப்பாளர்கள் வந்து அந்த ரசிகையை அழைத்து சென்றனர். இது பற்றி மாதவன் கூறுகையில், எனக்கு நிறைய ரசிகைகள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த பெண் மிகவும் உற்சாகம் நிறைந்தவராக இருக்கிறார். அவர் அப்படி நடந்துகொண்டது எனக்கு வியப்பை தரவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக