புதன், 25 ஜூலை, 2012

ஆண்களோடு வாழமுடியாது என்ற நடிகை சோனா திடீர் மனமாற்றம் : திருமணத்துக்கு தயாராகிறார்.


     கவர்ச்சி நடிகை சோனா திருமணத்துக்கு தயாராகிறார். ஏற்கனவே கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து இருந்தார். ஆண்களோடு வாழமுடியாது. அவர்கள் நம்பிக்கையானவர்கள் அல்ல என்றெல்லாம் சாடி இருந்தார்.

     அப்படிப்பட்டவரிடம் தற்போது மனமாற்றம் ஏற்பட்டு உள்ளது. தனது டுவிட்டரில் என்னை புரிந்து கொண்டு நன்றாக கவனித்துக் கொள்பவரை திருமணம் செய்துகொள்ள தயராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் அழகாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். 

     சோனா ‘கோ‘, ‘குரு என் ஆளு’, ‘பத்து பத்து’, ‘குசேலசன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ‘கனிமொழி’ படத்தை தயாரிக்கவும் செய்தார். சமீபத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் தன்னை மானபங்கம் செய்ததாக எஸ்.பி. சரண் மீது போலீசில் புகார் அளித்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டு வழக்கை வாபஸ் பெற்றார்.

     தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டு உள்ளார். திரையுலகின் ஒரு இருட்டு பக்கங்களை படத்தில் கொண்டு வருவேன் என்று அறிவித்து உள்ளார். சினிமாவில் சந்தித்த கசப்பான அனுபவங்கள் தன்னை தவறாக பயன்படுத்த முயன்றவர்கள் பற்றியெல்லாம் படத்தில் சொல்வேன் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தை எடுக்க எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது. நிறைய கொலை மிரட்டல்கள் வருவதாக கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக