வெள்ளி, 13 ஜூலை, 2012

நபிகளாரின் பொன்மொழிகள்.


இஸ்லாம் - வெண்ணிற ஆடையே சிறந்தது 
நபிகளாரின் பொன்மொழிகள்


*   ஒரு முஸ்லிமைத் துன்புறுத்தியவன் என்னைத் துன்புறுத்தியவனாவான்.  
    என்னைத் துன்புறுத்தியவன் இறைவனைத் துன்புறுத்தியவனாவான். 
    அந்நிய மதத்தினரை துன்புறுத்தியவன் என்னை (முஹம்மதை) 
    துன்புறுத்தியவனாவான்.

*   திருமணம் செய்ய வசதியிருந்தும் திருமணம் செய்யாதவன் என்னைச்  
     சார்ந்தவன் இல்லை.

*   பெற்றோரைக் கொடுமைப்படுத்தியவர் எதுநாள் வரை என்னிடம் மன்னிப்பு 
     கேட்கவில்லையோ, அதுநாள் வரை அவர் பாவிகளின் கூட்டத்திலேயே 
     சேர்ந்திருப்பார்.

*   வெண்மையான ஆடைகளை அணியுங்கள். வெண்மையான ஆடை 
     சிறந்ததாகும். அதனை மரணித்தவர்களுக்கு கபன் ஆடையாக 
     அணிவியுங்கள்.

*   சொர்க்கமும் நரகமும் உங்கள் பெற்றோர்களாகும். அவர்களுக்கு  
     நல்லதைச் செய்தால் சொர்க்கத்தின் வாசலை அல்லாஹ் திறந்து 
     விடுகிறான். நோவினைச் செய்தால் நரகம் தான் கிடைக்கும்.

*   ஒருவன் தன் தந்தை மரணித்தபின் அவருடைய நண்பர்களுடன் 
     உறவுகொள்வதே சிறந்த செயலாகும்.

*   உங்கள் குழந்தைகளை முத்தமிடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் 
     சொர்க்கத்தில் பதவி உண்டு.

*   உங்கள் குழந்தைகளை சங்கைப்படுத்துங்கள். குழந்தைகளைச் 
     சங்கைப்படுத்துவது ஒரு வணக்கம்.

*   ஒருவன் தனது பிள்ளைகளுக்கு தனது சொத்தில் அவர்களுக்குரிய 
    பங்கைக் கொடுக்கவில்லையானால், அவர்களை பெரும் நஷ்டத்திற்கு 
    ஆளாகி விடக்கூடிய நிலையில் ஆக்கினால் தீர்ப்புநாளில் அல்லாஹ் 
    சுவர்க்கத்தில் அவருக்குரிய பங்கை நஷ்டப்படுத்தி விடுவான்.

*   வயது வந்த பெற்றோர்களில் (தாய் தந்தை இருவரில்) ஒருவர் இருந்து 
     அவருக்கு (பிள்ளைகள்) செலவு செய்யவில்லையானால் அவர்கள் 
     சொர்க்கம் நுழைய முடியாது.

*   பெற்றோர்களுக்கு உதவி செய்யும் பிள்ளைகளுக்கு (எனது) வாழ்த்து  
     உண்டாகட்டும். அவருடைய வயதை அல்லாஹ் அதிகப் படுத்துவனாக. 

ஆமீன்.


நன்றி : தினமலர்

1 கருத்து:

  1. நல்ல பதிவு!

    மேல் குறிப்பிட்டுள்ள நபிகளாரின் பொன்மொழிகள் எந்த ஹதீஸ் புத்தகத்தில், எந்த நபித்தோழர் அறிவித்துள்ளார் என்பதினை அன்புடன் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு