வெள்ளி, 6 ஜூலை, 2012

பாலிவுட் நடிகருடன் முத்தக்காட்சி சூப்பர் : இலியானா பேட்டி

     பாலிவுட் நடிகர் ரன்பீருடன் முத்தக்காட்சி சூப்பராக வந்திருக்கிறது என்றார் இலியானா. பாலிவுட்டில் ரன்பீர் கபூர் படங்களில் காதல் காட்சிகள் பிரபலம். இவர் 'பாபி' படத்தில் நடித்த ரிஷிகபூர் மகன். ரன்பீர் கபூர் நடிக்கும் இந்தி படம் 'பர்பி' என்ற பெயரில் உருவாகிறது. இதில் பிரியங்கா சோப்ரா, இலியானா ஹீரோயின்கள்.

     இந்தியில் இலியானா நடிக்கும் முதல்படம் இது. ஏற்கனவே இப்படத்தில் நடிக்கும்போது பிரியங்காவுக்கும் இவருக்கும் பிரச்னை ஏற்பட்டது என்று தகவல்கள் வெளிவந்தன. அதை இருவரும் மறுத்தனர். முதன்முறையாக பாலிவுட்டில் நடிக்கும் இலியானா பரபரப்பாக பேசப்படும் வகையில் இப்படத்தில் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார்.

     இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அப்போது படத்தில் இடம்பெறும் முத்தக்காட்சி பற்றி இலியானா பகிரங்கமாக பேசினார். அவர் கூறும்போது, ரன்பீருடன் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியவுடன் நடுங்கி விட்டேன். இதுவரை லிப் டு லிப் காட்சியில் நடித்ததில்லை.

     ஆனால் இப்படத்திற்கு குறிப்பிட்ட சீனில் முத்தக்காட்சி என்பது மிக முக்கியம் என்பதை இயக்குனர் புரிய வைத்தார். பிறகு நடிக்க ஒப்புக்கொண்டேன். ரன்பீருடன் நடித்த முத்தக்காட்சி சூப்பராக படமாகி உள்ளது என்றார்.

     இலியானா பேச்சை கேட்டதும் அருகில் இருந்த ரன்பீர் வெட்கத்தில் முகம் சிவந்தார். நிலைமையை சமாளிக்கும் விதமாக அங்கிருந்த இயக்குனர் அனுராக் பாசுவுக்கு அவர் முத்தம்கொடுப்பதுபோல் பாவனை செய்தார். இதனால் அரங்கமே கலகலப்பானது.

     இலியானா முத்தக்காட்சியில் நடித்திருப்பதாக கூறியவுடன் மற்றொரு ஹீரோயின் பிரியங்கா ஷாக் ஆனார். நிகழ்ச்சியின் கவனம் முழுவதும் இலியானா பக்கம் திரும்பியதே அவரது அதிர்ச்சிக்கு காரணம். இலியானாவுக்கு பதிலடி தரும் வகையில், தான் ரன்பீருடன் நடித்துள்ள நெருக்கமான காட்சி பற்றிய விவரத்தை அவர் வெளியிடுவார் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக