புதன், 11 ஜூலை, 2012

பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் ரூ.10லட்சம் நிதியுதவி!



     தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உதவியுள்ளார்.

     விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதில் ஒருபகுதியாக ஒவ்வொரு வருடமும் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்குகிறார். அதன்படி இந்தாண்டுக்கான விழா சென்னை வடபழனியில் நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிப் பதக்கம், கேடயம், சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். 

     மேலும் 200 ஏழை மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 லட்சம் கல்வி உதவி தொகையும், உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 4 லட்சம் உதவி தொகையும் என மொத்தம் ரூ. 10 லட்சம் நிதி வழங்கினார். பின்னர் மாணவர்களுக்கு தன் கைப்பட உணவு பரிமாறி அவர்களுடன் சேர்ந்து உணவும் சாப்பிட்டார்.

     பின்னர் விஜய் பேசுகையில், மாணவ, மாணவிகளை ஊக்குவிக்க ஒவ்‌வொரு ஆண்டும் இந்தப்  பணியை செய்து வருகிறேன். தொடர்ந்தும் செய்வேன். எல்லோருக்கும் கல்வி ரொம்ப முக்கியமானது. அதை நன்றாக படித்து மாணவர்கள் ஓர் உயரிய இடத்திற்கு வர‌ வேண்டும் என்று கூறினார்.

     ஏதோ விளம்பரத்திற்காகவாவது உதவி செய்கிறார்களே. அதுவே பெரிய விஷயம்தான். தொடர்ந்து நடைபெறவேண்டும். இதே போல் நடிகர் ஜீவாவும் ஒரு மாணவனுக்கு மருத்துவப் படிப்புக்கு உதவி செய்திருக்கிறார். அதே போல் நடிகர் சூர்யாவும் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக உதவி செய்கிறார்.

நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக