திங்கள், 18 ஜூன், 2012

சீவரின் தவத்தில் விளங்குபவன்.


19.                         இது பதி ஏலம் கமழ்பொழில் ஏழும் 
                              முதுபதி செய்தவன்; மூதறிவாளன்; 
                              விதுபதி செய்தவன்; மெய்த்தவம் நோக்கி,  
                              அதுபதி யாக அம்ருகின் றானே.
     
     வடக்குத் திக்கிற்குத் தலைவன் விடய வாசனைக்கு இடமான ஏழு ஆதாரங்களையும், அழித்துப் பாழான நிலமாக்கியவன். அவன் பழைமை யாகவே அனைத்தும் அறிபவன். பாவங்களைப் போக்கும் பலியைக் கொள்ளும் வடக்குத் திக்கை இடமாக்கிக் கொண்ட சீவரின் உண்மைத் தவத்தைக் கண்டு, அது செயபவரையே இடமாக்கிக் கொண்டு எழுந்தருளுபவன்.

     விளக்கம் : இதுபதி - வடக்குத்திக்கு. அத்திக்கில் சிவபெருமான் விளங்குபவன். ஏலம் - வாசனை. விது - பலி; அது பாவ நிவர்த்திக்குரியது. முதுபதி - சுடுகாடு. அது - தவம. ஏழ் - ஏழ் ஆதாரங்கள். முதுபதி செய்தவன் - சுடுகாடு ஆக்கியவன். உண்மையான தவம் செய்பவரிடத்தில் அவன் விளங்குவான்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக