சனி, 16 ஜூன், 2012

சோதியானவன்.


15.                      ஆதியுமாய், அரனாய், உடலுள் நின்ற 
                            வேதியுமாய் விரிந்து ஆர்ந்து இருந்தான் அருள்
                            சோதியுமாய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள் 
                            நீதியுமாய், நித்தம் ஆகி நின்றானே.
     
     சிவபெருமான் உலகைப் படைப்பவனாயும், அழிப்பவனாயும் உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும் அவற்றைக் கடந்தும் விளங்குகின்றான். அவன் திருவருள் பேரொலியாய்க் குவியாத இயல்புடன் ஊழினை இயக்குபவனாயும் என்றும் அழியாத தன்மையுடன் இருக்கின்றான்.

     விளக்கம் : ஆதி - படைப்பவன். அரன் - அழிப்பவன். வேதியுமாய் மாற்றம் செயபவனாயும். நித்தம் - அழியாத தன்மை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக