சனி, 9 ஜூன், 2012

அவனையின்றி முத்தி பெற வழியில்லை!

6.                            அவனை ஒழிய அமரரும் இல்லை 
                               அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை 
                               அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
                               அவனன்றி ஊர்புகு மாற்றி யேனே.


     சிவபெருமானைவிட மேன்மையுடைய தேவர் எவரும் இல்லை. அவனையன்றிச் செய்கின்ற அறிய தவமும் இல்லை. அவனையே அல்லாது நான்முகன், திருமால், உருத்திரன் என்னும் மூவராலும் அடைவது எதுவும் இல்லை. அவனையல்லாது முத்தி அடைவதற்குரிய வழியை யான் அறியேன்.

    விளக்கம் : மூவர் - நான்முகன், திருமால், உருத்திரன். இந்த மூவரும் சிவபெருமானின் அதிகாரத்தைப் பெற்று முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் செய்வர்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக