ஞாயிறு, 10 ஜூன், 2012

யாவுமாய் நிற்பவன்!

10.                      தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்;
                           தானே சுடும் அங்கி, ஞாயிறும் திங்களும்;
                           தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்;
                           தானே தடவரை, தண்கடல் ஆமே.


     சிவபெருமானான தானே இவ்வுலகத்தைத் தாங்கிக் கொண்டு வான வடிவாய் விளங்குபவன். அப்பெருமானே சுடும் தீயாகவும், கதிரவனாகவும், சந்திரனாகவும் இருக்கின்றான். அவனே அருள்மழை பெய்யும் சத்தியுமாக இருக்கின்றான். அவனே அகன்ற மழையாகவும் குளிர்ந்த கடலாகவும் உள்ளான்.

     விளக்கம் : சிவபெருமானே எங்கும் நிறைந்து விளங்குகின்றான். இருநிலம் - பெரிய உலகம். அங்கி - அக்கினி, தீ. தையல் - சத்தி. தடவரை - பெரிய மலை. தண்கடல் - குளிர்ந்த கடல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக