சனி, 16 ஜூன், 2012

எதனையும் கண்காணிக்கின்றவன்!


14.                      கடந்துநின்றான் கமல மலர் ஆதி;
                           கடந்துநின்றான் கடல்வண்ணன் எம் மாயன்;
                           கடந்துநின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்;
                           கடந்துநின்றான் எங்கும் கண்டு நின்றானே.
     
     சிவபெருமான் சுவாதிட்டம் எனும் மலரில் விளங்கும் நான்முகனைக் கடந்து விளங்குகின்றான். மணிபூரகத்தில் உள்ள எம் மாயனான திருமாலைக் கடந்துள்ளான். அந்த இருவருக்கும் மேல் அநாகதச் சக்கரத்தில் உள்ள உருத்திறனைக் கடந்துள்ளான். இம் மூவரையும் கடந்து சிரசின் மேல் நின்று யாவற்றையும் கண்டவண்ணம் உள்ளான்.

     விளக்கம் : சுவாதிட்டானத்திற்கு நான்முகனும், மணிபூரகத்திற்குத் திருமாலும, அநாகதச்சக்கரத்திற்கு உருத்திரனும் அதிதேவதைகள் ஆவார்கள். கண்டத்துக்கு மகேசுவரனையும் புருவநடு ஆஞ்ஞைச் சக்கரத்திற்குச் சதாசிவனையும் தேவதை என்று கூறுவார்கள்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக