திங்கள், 18 ஜூன், 2012

தேவர் வணங்குவது ஏன்?


16.                       கோது குலாவிய கொன்றைக் குழல்சடை 
                            மாது குலாவிய வாள்நுதல் பாகனை 
                            யாது குலாவி அமரரும் தேவரும் 
                            கோது குலாவிக் குணம் பயில் வாரே.
     
     சிவபெருமான் நரம்புடைய கொன்றை மலரை அணிந்த சுருண்ட சடையை யுடையவன். அழகுடைய ஒளியுடன் கூடிய நெற்றியையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் கொண்டவன். அத்தகையவனை மூவர்களும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தி என்ன குணத்தைப் பாராட்டி நாடுவர்? நாட மாட்டார்.

     விளக்கம் :  கோது - நரம்பு. குலாவிய - பொருந்திய. மாது - அழகு. வாள்நுதல் - ஒளியுடைய நெற்றியுடைய உமாதேவியார். குழற்சடை - சுருண்ட சடை. யாது குலாவி - என்ன எனப் பாராட்டி.  குணம் பயில்வார் - குணத்தைப் பாராட்டுவர். மூவரும் தேவரும் குற்றத்துள் பொருந்தியுள்ளமையால் உமையொரு பாகனின் குணத்தைப் பாராட்ட மாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக