திங்கள், 18 ஜூன், 2012

இடியும் முழக்கமும் ஈசர் உருவம்!


20.                        முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த 
                             அடிகள் உறையும் அறனெறி நாடில்,
                             இடியும் முழக்கமும் ஈசன் உருவம் 
                             கடிமலர்க் குன்றம் மலைஅது தானே.

     இறப்பையும் பிறப்பையும் கருவில் உதிக்கும் முன்பே வரையறை செய்தவன் சிவன். அவன் பொருந்தியுள்ள நியதியை அறியின் அது விளக்கம் பொருந்திய கண் மலருக்கு மேல் உள்ள சிரசாகும். அவ்விறைவனது வடிவம் ஒளியும் ஒலியுமாம்.

     விளக்கம் : முடிவு - இறப்பு. அடிகள் - சிவபெருமான். அறனெறி - அறன் + நெறி. முழக்கம் - ஒளி. கடி - விளக்கம். இடி - ஒளி; விந்து. பஞ்ச பூதத் தலைவர்களில் ஆகாய பூதராக உள்ளவர் சதாசிவர். பயிற்சியாளரின் சிரசில் தியானத்தில் மேகம் ஒலிப்பது போல் தோன்றும்.     

1 கருத்து: