ஞாயிறு, 10 ஜூன், 2012

தந்தையாகித் தாங்குவான்!

7.                         முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
                            தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் 
                            தன்னை, "அப்பா" எனில் அப்பனு மாய்உளன்
                            பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத் தானே.


     பொன் போன்ற சகசிரதளத்தில் விளங்குபவன் சிவபெருமான். அவனே பழ்மையாகச் சமமாக வைத்து எண்ணப்படுகின்ற நான்முகன், திருமால், உருத்திரன் முதலிய மூவர்க்கும் பழமையானவன். தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைமகன். அவன் தன்னை 'அப்பா' என்று அழைக்கின் வந்து தந்தையாகி உதவுபவன்.

     விளக்கம் : ஈசான மூர்த்தியே உலகம் தோன்றுவதற்கு முன்பும் உலகம் அளிவதற்குப் பின்பும் நிலைபேறாக விளங்குபவன். அவன் ஒளிவடிவமாய் விளங்குபவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக