வியாழன், 23 பிப்ரவரி, 2012

மனிதனும் தெய்வமாகலாம்! திருவாசகம்!

இந்து மதத்தில் இருக்கின்ற மனிதனை நெறிப்படுத்துகிற மன அமைதிக்கு உண்டான பல்வேறு விதமான யோகம், தியானம் போன்ற விசயங்களை நம்முடைய முன்னோர்களாகிய பெரியவர்கள் கூறியவற்றை அவர்கள் கூறியபடியே அப்படியே தருகிறேன்.


முதலில் திருமூலரிலிருந்து ஆரம்பிப்போம்.

திருச்சிற்றம்பலம்.


விநாயகர் காப்பு.
                          
                          ஐந்து கரத்தனை யானை முகத்தனை
                          இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
                          நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
                          புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


     விநாயக பெருமான் ஐந்து கைகளை உடையவன்; யானையின் முகத்தை உடையவன்; இளம்பிறை சந்திரனைப் போன்ற தந்தத்தை உடையவன்; சிவபெருமானின் மகன்; ஞானசிகரமாய் விளங்குபவன்; இத்தகைய அப்பெருமானை மனத்துள் வைத்து அப்பெருமானின் திருவடிகளை வணங்குகின்றேன்.